பக்கம்:நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

சூரியனின் சக்தி வீணாவதைத் தடுக்கவேண்டும். இதைப்பற்றி ஆராய்ந்தவர்கள் பல உபயோககரமான யோசனைகளை கூறியிருக்கின்றனர். இதுவரை சூரிய அடுப்பு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் முயன்று செய்ய ஏராளமாக இருக்கின்றன. சூரிய சக்தியை பயன்படுத்த ஒரு நிபுணர் குழு முற்படவேண்டும்.

சிறு அணைகள், சிறு தேக்கங்கள், போன்றவைகள் பற்றிய போதிய அக்கரை செலுத்தவில்லை. பெரும்பாலும் எல்லா மாவட்டத்தில் இந்த திட்டங்களை மேற்கொள்ள வசதிகள் இருக்கின்றன. அவை மகத்தானவைகளாக இல்லாமலிருக்கலாம். ஆனால் அவை நீர்பாசன வசதியை உறுதியாக ஏற்படுத்தித்தரும்.

பல ஆண்டுகளாக அரசினரிடம் வாளாயிருக்கும் பாலாறு திட்டம் மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டும்.

குழாய் கிணறுகள், 'ஆர்டீகள்' கிணறுகள் பரவலாக ஏற்படவேண்டும்.

வட ஆற்காடு மாவட்டத்தில் செய்யாறு திட்டம், செங்கற்பட்டில் வேகவதி திட்டம், மதுரையில் ஆலாங்குளம் திட்டம், குடகனாறு திட்டம், சிரியாறு திட்டம், இப்படி பல திட்டங்களைப்பற்றி பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களை அமுலாக்கவேண்டும்.

மூன்றாவது திட்டத்தில் வாய்ப்புள்ள இடங்களில் தண்ணீரை தேக்கி நீர்பாசனத்திற்கு பயன்படுத்த வழிகளை காணவேண்டும். இதிலிருந்து, மாநில அரசு, மாற்றாந்தாய் நிலையை மாற்றி, நியாயமான பங்கைப் பெற்று, புறக்கணிப்பு நிலையை தவிர்த்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறது என்றே கருதவேண்டியிருக்கிறது.பதவியிலிருப்பவர்கள் விழிப்புடன் இம்மாநிலத்தின்