பக்கம்:நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

குறையும். எனவே இலாபத்தை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு திட்டத்தை சிலத் துறைகளிலாகிலும் மேற்கொள்ளவேண்டும். நியாய அடிப்படையில் சம பங்கு கிடைக்கும்போது உற்பத்திக்கு, புது வேகம் ஏற்படும்.

திட்டங்களை உருவாக்கியவர்கள் பொருளாதார ஏற்றத்தாழ்வை போக்கி, சீரான வருமானத்தை உண்டாக்க முனைந்தனர். ஆனால், இன்றுவரை இதில் போதிய வெற்றி காணப்படவில்லை.

மற்றோரு முக்கிய விஷயம் இவ்வளவு பெரிய திட்டத்திற்கு எப்படி தேவையான பணத்தை திரட்டப் போகிறோம் என்பதாகும். ஏற்கனவே வரிக்கொடுமை, அதி லும் மறைமுக வரியின் மூலம், மக்களை அடியோடு வாட்டியிருக்கிறது. எனவே, மேலும் வரிகளை உயர்த்துவது விரும்பத்தக்கதல்ல. சமுதாயத்தில் மேல்தளத்திலிருப்பவர்களிடம் குவிந்திருக்கும் பணத்தை திரட்டும் வழிகளை நாம் கொள்ளவேண்டும். இவை மக்கள் திட்டங்கள் என்கிற உணர்வு ஏற்படும்போதே, மக்களிடம் உற்சாகம் ஏற்படும். மக்களுக்கு அந்த விரும்பத்தக்க எண்ணம் தொடர்புள்ள துறைகளில் ஏற்படவேண்டும்.

பெரிய நகரங்களில் உருவாக்கப்பட்ட திட்டங்களையும் ஆராய்ந்து மேற்கொள்ளவேண்டும். சேரி ஒழிப்பு திட்டங்களை மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் தீவிரமாக மேற்கொள்ளவேண்டும்.

மக்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்துவது மிக மிக அவசியம். ஏன் என்றால் எந்த திட்டமும், தனி மனிதனை மையமாகக்கொண்டே உருவாக்கப்பட்டதாகும். அத்துடன் புதிய முற்போக்கு திட்டங்களை துணிவுடன் செயல்படுத்தவேண்டும்.