a87 . நாம் அறிந்த கி.வா.ஜ.
செய்துகொள்வதில் விருப்பமில்லை’ என இவர் எழுதி விட்டார். . . . . . . - ... • கிருஷ்ணராயபுரத்தில் இருந்த இவருடைய மாமா நாராயண கனபாடிகள், ஐயரவர்களுக்கே நேரடியாக 9 . 3 - 1929-இல் ஒரு கடிதம் எழுதினார்: “அந்தப் பெண்ணை இவர் திருமணம் செய்துகொள்ளும்படி தாங்கள்தாம் வற்புறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இப்படியே இருந்து சந்நியாசி ஆகிவிடுவான். இவனும் மற்றவர்களைப்போலத் திருமணமாகி ஒரு வேலையில் ஈடுபட்டுக் குடும்பம் நடத்தத் தொடங்கினால்தான் இவனுடைய குடும்பக் கஷ்டம் நீங்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு, ஐயரவர்கள் இவரிடமே கொடுத்துவிட்டார் ஏதும் சொல்லவில்லை.
அன்று இவருக்குச் சற்று மனச்சங்கடம் ஏற்பட்டது, உடனே தம் தகப்பனாருக்கு ஒரு கடிதமும், மாமாவுக்கு ஒரு கடிதமும் எழுதினார்.
பெண் குழந்தைகள் அறிவும், பண்பும் பெறுவதற்கு முன்னால் அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களுக்குக் கல்யாணம் செய்துவைக்க அலைவது இவருக்கு வெறுப் பாக இருந்தது. பெண்களுக்கு ஆண்களைப் போலப் படிக்கவும், தங்கள் திறமையை வளர்த்துக்கொண்டு, அதனை வெளிப்படுத்த வாய்ப்பும் கொடுக்கப்பட இவண்டுமென்பது இவரது கருத்தி. :
பேராசிரியர் சோமசுந்தர பாரதியார் சொற்பொழிவினிமை அதற்கேற்றாற்போல் முதல் நாள் மாலையில், பச்சையப்பர் கல்லூ யி ல், மதுரைப் பேராசிரியர் சோமசுந்தர பாரதியார் . பெண்மையும் ... - தமிழ் இலக்கியமும், என்பதுபற்றி ஆழ்வி’, ur ஐயரவர்களுடன் இவரும்.சென்று கேட்டு வந்திருந்தார்.