பக்கம்:நாராயணன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்றைக்கேனும் உண்மை வெளிப் படும் என்பது அவர் எண்ணம். 'கெட்டிக்காரன் பொய் எட்டு நாளில் தெரிந்து விடும்', என்பது பழமொழி அல்லவா !

இரண்டொரு நாட்கள் சென்றன. ஒரு நாள் நாராயணன் முன்னதாகப் பாடசாலைக்கு வந்து விட்டான். அப்போது, அங்கே ஒருவரும் இல்லாமையால் அவன் தனியே ஒர் இடத்தில் அமர்ந்து தன் பாடத்தைதைப் படித்துக்கொண்டு இருந்தான். உபாத்தியாயர் தம் அறையில் ஏதோ எழுதிக்கொண்டு இருந் தார். பிறகு அவர் திடீரென்று ஒர் அவசர வேலையாக வெளியே சென்றார்.அவர் அவ்விதம் செல் லும் போது,மாணிக்கம் அப்போது தான் பாட சாலைக்குள் நுழைந்தான்.
மாணிக்கம் பாடசாலைக்குள் வந்ததும் நாராயணன் தனிமையாக உட்
             29
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/32&oldid=1339763" இலிருந்து மீள்விக்கப்பட்டது