பக்கம்:நாராயணன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

பாடசாலை முடிந்தது. பிள்ளைகள் எல்லோரும் வழக்கம் போல் வீடு செல்லப் புறப்பட்டனர். அவர்களில் பலர் நாராயணன் மீதே சந்தேகப்பட்டனர். சிலர் ஒன்றும் தோன்றாமல் விழித்தனர். தன் சட்டைப் பையில் பேனா எவ்விதம் வந்தது என்பதை அறிய நாராயணனும் மிகவும் ஆவல் கொண்டான். உபாத்தியாயர் கேட்ட கேள்விகளிலிருந்து அவனுக்கு மாணிக்கத்தின் மீது சிறிது சந்தேகம் ஏற்பட்டது. ஆதலால், அவன் அப்பொழுதிலிருந்தே மாணிக்கத்தின் செயல்களைக் கவனிக்க ஆரம்பித்தான்.

கந்தன், முருகன், கோவிந்தன் இவர்களுக்கு நாராயணன்மீது சிறிதும் சந்தேகம் இல்லை. ஆனால், அவன் சட்டைப் பையில் அப்பேனா எவ்விதம் வந்திருக்கும் என்றே அவர்கள் ஆச்சரியப்பட்டனர். அப்போது அவர்களுக்-

48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/51&oldid=1345885" இலிருந்து மீள்விக்கப்பட்டது