பக்கம்:நாராயணன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கும் மாணிக்கத்தின்மீது சிறிது சந்தேகம் உண்டாயிற்று.களவுபோன நிகழ்ச்சியை ஆசிரியர் அவ்வளவோடு விட்டுவிட்டார் என்றே மாணிக்கம் எண்ணினான். அன்றியும் ஆசிரியர், நாராயணன் மீதே சந்தேகம் கொண்டிருக்கிறார் எனவும் அவன் எண்ணினான். ஆதலால், அவனுக்கு மிகவும் மகிழ்ச்சி உண்டாகி விட்டது. அவன் கந்தன், கோவிந்தன் முதலியவர்களைக் கண்டு, “அடே, நாராயணனை நாம் மிகவும் யோக்கியன் - யோக்கியன் என்று எண்ணியிருந்தோமே! அவன் செய்த திருட்டுச் செயலைப் பார்த்தீர்களா?” என்றான்.

அப்போது அவர்கள், அவனுக்கு ஒன்றும் பதில் சொல்லவில்லை. ஆதலால் மாணிக்கம், தன் பேச்சை உடனே மாற்றிக் கொண்டான். ஏனென்றால் தான் செய்த திருட்டுத் தொழில் ஒருகால் அவர்களுக்குத் தெரிந்துவிட்டதோ என அவன் சந்தேகம் கொண்டான்.

பிள்ளைகள் சென்ற பிறகும் அந்த ஆசிரியர் பாடசாலையை விட்டு நீங்க

49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/52&oldid=1345886" இலிருந்து மீள்விக்கப்பட்டது