பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 - நாற்பெரும் புலவர்கள் என்ற பொருளை வைத்து, விழுமிய பாடல் ஒன்றைப் பாடின்ர். - சாத்தனார் பாக்களின் பெருமை மணிமேகலைக் காப்பியம் அன்றி, சாத்தனார் பாடியனவாக சங்க நூல்களில் சில பாடல்கள் கிடைத்துள்ளன. இப்பெரியார் பாடல்கள் பேரழகு வாய்ந்தவை; இயற்கை வருணனைகள் அமையப் பெற்றவை; பெளத்த மதக் கொள்கைகள் நிறையப் பெற்றவை. எல்லா மதக் கொள்கைகளும் கடவுளரும் இவர் பாடல்களில் காணலாம். இவர் பாக்கள் கணக்கற்ற நீதிகள் நிரம்பியவை; மனத்தைத் தம் வசம் இழுப் பவை. நீங்கள் இப்பெரியார் பாடல்களைப் பன் முறையும் படித்துச் சுவைத்தல் வேண்டும். இவருடைய பாக்களாகிய மலர்களில் தமிழ்த்தேன் நிறைந்துள்ளது.