புலியூர்க்கேசிகன் 145
‘என்னுடையது என்னுடையது’ என்று உறுதியாகப்
பற்றிக் கொண்டிருக்கிற அறிவற்றவனின் செல்வத்தை, அதற்கு யாதொரு தொடர்பும் இல்லாத யானும் என்னுடையது என்னுடையது’ என்று சொல்லிக் கொண்டிருப்பேன். அச்செல்வம் அவனுடையதானால், அதனை அவன் தானும்
அநுபவியாமல் இருக்கிறான்; பிறருக்கு அதனை வழங்கி மகிழாமலும் இருக்கிறான்; இப்படி அவன் இருப்பானோ?.
யானும் அதனை அப்படியே ஏதும் செய்ய வகையின்றி இருக்கின்றேன் அல்லவோ!
‘கருமியிடம் இருக்கும் செல்வம் செல்வப் பயனைத் தராததினால் இல்லாதது போலவேதான் கருதப்படும் என்பது கருத்து.
277, வழங்காத செல்வரின், நல்கூர்ந்தார் உய்ந்தார்;
இழந்தார் எனப்படுதல் உய்ந்தார்-உழந்ததனைக் காப்புய்ந்தார்; கல்லுதல் உய்ந்தார்; தம் கைந்நோவ யாப்புய்ந்தார்; உய்ந்த பல.
தாம் பெற்றிருக்கும் பொருளைப் பிறர்க்கு வழங்கி உதவாத செல்வரைக் காட்டினும், அச்செல்வமே பெற்றிராத வறுமையாளர்கள் பழியினின்றும் தப்பியவர்கள் ஆவார்கள். அது எப்படி எனில் அவர் அதனை இழந்து விட்டனர் என்னும் அபவாதத்தினின்றும் தப்பினார்கள்; அதனை வருந்திக் காப்பதனின்றும் தப்பினார்கள்; அதனைப் புதைத்து வைப்பதற்கு நிலத்தைத் தோண்டுதலினின்றும் தப்பினார்கள்; தம்கைகள் நோவும்படியாகக் கெட்டியாகப் பற்றியிருப்ப தனின்றும் தப்பினார்கள். இப்படி அவர்கள் தப்பின பலவாகும்.
‘பணம் இருந்தும், உதவாதவன் இத்துணைத் தொல்லை களுக்கும் உள்ளாவான்’ என்பது கருத்து.
278. தனதாகத் தான்கொடான், தாயத் தவரும்
தமதாய போழ்தே கொடாஅர்;- தனதாக முன்னே கொடுப்பின் அவர்கடியார்; தான் கடியான் பின்னை அவர் கொடுக்கும் போழ்து.
பொருள் தனக்கு உரிமையுடையதாக இருக்கையிலேதான் கொடுத்து மகிழமாட்டான்; அவன் இறந்துபோன பின் அவனுடைய தாயத்தார்களும் அப்பொருள் தமதாக மாறிவந்த பொழுதிலே தாமும் கொடுத்து உதவமாட்டார்கள். முதலிலேயே பெற்றிருந்தவன் கொடுத்திருந்தால், அவர்கள்