பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

யாக இருக்கலாம்; அஃது அமுதினும் இனியது ஆகும். அயலார் இடுவது கருணைக்கிழங்கு பொறியல் ஆயினும் அது வேப்பங்காய்தான். சுவை என்பது பொருளை ஒட்டியது மட்டும் அன்று. அது தருவாரது மன அருளையும் ஒட்டியது ஆகும்.

கொல்லன் உலைக்களத்தைப் பார்; அதில் சுட்டுக் காய்ச்சப்படும் பொருளும் அதைப் பிடிக்கும் சூட்டுக் கோலும் இணைபிரிவது இல்லை; காய் எரி புகுந்து கனத்த சூட்டில் இரண்டும் பதன் படுகின்றன. சூட்டைக் கண்டு ஒன்றைவிட்டு ஒன்று விலக முற்படுவதில்லை; ஆனால் அதைப் பிடிக்கும் குறடும் அடிக்கும் சம்மட்டியும் பிரிந்து விடுகின்றன. நெருங்கிய சுற்றத்தினர் வளம் சுருங்கிய காலத்தில் ஒட்டி உறவாடுவர்; பதுங்கும் பண்பினை உடைய நண்பினர் சமயம் வரும்போது நெகிழ்ந்து தப்பித்துச் சென்று விடுவர். பழகுகிறவர் எல்லாம் பண்பினர் என்று கொள்ளுவதற்கு இல்லை; இளகுகிறவர் நம்மோடு இணை யும் சுற்றத்தினரே ஆவர்.

இறுதிவரை நம்மோடு இணைந்து உறுதியாக உதவுவார் என்று நம்பி ஒருசிலரை நயக்கின்றாய்; மறுமைக்கும் அவர்கள் பெருமை தேடித் தருவர் என்று கருதுகிறாய். வாழும் போது நம் இன்பத்தில் பங்கு கொள்கின்றார். ஆனால் துன்பத்தில் நெகிழ்ந்து விடுகின்றனர். மண் குதிரை, இவர்களை நம்பி வேகமாகச் செல்லும் வெள்ளத்தில் பயணம் செய்ய இயலாது. பங்குச் சந்தை சரிந்து விட்டால் அங்குப்போடும் பணம் அரோகராதான். தங்கும் இன்பம் நினலக்கத் தக்க சுற்றத்தினரை நயக்க; அவர்கள் பயன்படுவர்.

இருந்து முகம் திருத்தி ஈர்க்குக்கொண்டு பேன் வாங்கி விருந்து வந்திருக்கிறது என்று சொன்ன அளவில் அவள்