பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

"என்னடா உனக்கு?"

"பக்தன் நான்" என்கிறான்.

"சித்தம் இழந்தேன்" என்று பித்தம் கொள்கிறான்.

"இங்கே வா! அவள் கையில் ரத்தம்; அதனோடு அழுகல் புண் , இதைத்தானே, 'மாந்தளிர் மேனி' என்று கூறினாய். அவள் கையில் சொரிந்தாள்; அது எரிந்து புண் ஆகிவிடடது. சும்மா இல்லை; அதைத் தொட்டுத் தொட்டுப் பெரிதாக்கினாள்; கையில் இப்பொழுது கட்டு ஒன்று கட்டி இருக்கிறாள்: ஈ மொய்க்கிறது. பண்டம் அன்று. முண்டம்! அது கண்டம்; ஒரு தண்டம்; இதைப் பார்த்த பின் நீ யோசித்துக் கூறு; இவளா அழகி? அது வெறும் மயக்கம்."

"அழகு அழகு என்று பித்தம் பிடித்தவன்போல் பேசுகிறாய்; எதை அழகு என்று கூறுகிறாய்? மேல் தோலா வாழைப் பழத்தை உரித்துக் காட்டுகிறேன். உள்ளே வழ வழப்புதான்; அங்கங்கே ஓட்டைகள் துளைகள்; இந்த உடம்பு அதன் மீது போர்த்த போர்வை; அதைத்தான் நீ அழகு என்று கூறுகிறாய்! நான் சொல்வதை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா ? அந்தத் தோலைப் புரட்டிப்பார்; நீ தொடவே அருவருப்பாய். அதற்காக ஒரு பெண்ணை இழுத்து வந்து தோல் உரிக்க வேண்டும் என்பது இல்லை; சொன்னால் நீ புரிந்துகொள்வாய் அவ்வளவு தான். அழகி என்று அழிகிறாயே! எது அழகு? நீ யோசித்துக் கூறு."

"அவள் வாய் இதழ் சிவந்து இருக்கிறது. அதைக் கண்டு, "ஆகா பவளம் அது” என்று பகல் கனவு காண்கிறாய்; அவள் போட்ட வெற்றிலை பாக்கு, அதில் சேர்த்-