பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

மதுரை சென்றாலும் அது பின் தொடராமல் இல்லை; கண்ணகியைப் போலவே தொடர்ந்து சென்ற ஊழ்வினை கோவலன் வாழ்வினைப் பாழ்படுத்தியது; அவன் சாவுக்குக் காரணம் பழவினை என்றுதான் இளம் அடிகள் அளந்து கூறுகின்றார். காவியம் உணர்த்தும் உண்மைகளில் இஃது ஒன்று.

அறம் என்பது யாது? பிறர்க்கு உதவுவதே நல்லறம் ஆகும்; அம் மனப்பாங்கு ஏற்பட வாழ்வின் நிலையாமையை உணர்த்துதான் ஆகவேண்டும்.

“என்றும் செல்வம் நிலைக்கும்; இளமை கொழிக்கும்; அதிகாரம் நிலைக்கும்; அழகு கவர்க்கும்” என்று நினைக்க முடியாது; அவை தேய்ந்து போகுபவை.

கூரையைப் பிய்த்துத் தெய்வம் கொட்டுகிறது என்றால் குடை பிடித்துத் தடுக்க மாட்டார்கள், பை பிடித்து நிரப்புவார். செல்வம் வந்தால் வேண்டாம் என்று “டாம்” போட்டுப் பேசார்; ‘ஆம்’ வேண்டும் என்றுதான் கூறுவர்; எங்கே வந்து கொட்டுகிறது? லாட்டரி சீட்டுகள் வீட்டுக் குப்பை ஆகின்றன. அவற்றைப் பெருக்கும் கூட்டாளி அவன் மனைவி, இவனை ஒரு ஏமாளி என்று வருணிக்கிறாள்; “உங்களுக்கு எல்லாம் வராது” என்று அடித்துப் பேசுவாள்; படித்துச் சொல்வாள். “நாய்க்கு வால் அளந்துதான் வைக்கப்படுகிறது; யார் யாருக்கு இவ்வளவு என்பது முன் கூட்டியே முடிவு செய்யப்பட்டுள்ளது” என்பாள்; விளங்கனியைத் திரட்டியதும் இல்லை; உருட்டியதும் இல்லை; களங்கனிக்கு நிறம் கருப்பு: இஃது யார் படைத்த படைப்பு? வரப்போகும் வெள்ளத்தைத் தடுப்பது அரிது; அணைகட்டினாலும் அதுவும் தடுத்து நிறுத்தி விடாது தரப்போகும் செல்வத்தை யாரும் தடுத்து