பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

இந்த மாதிரி சொற்கள் வருவது தகாது என்பர்". "சேரிட மறியாமல் சேர்ந்து 'சேரி' மொழி அவனிடம் ஏறிவிட்டது" என்று வருந்துவார்கள். கேட்டு இல்லை என்றால் அந்தக்குடும்பத்தைபழித்துப் பேசுவார்கள். அவன்வைத்துக் கொண்டே இல்லை என்று சொல்லுவதாகக் கூறுவார்கள். போகும்போது இவன் என்ன எடுத்துக் கொண்டு போகப் போகிறான்? என்று ஆராய்ச்சியில் இறங்கி விடுவார்கள். "யாருக்கு வைத்துவிட்டுப் போகப் போகிறான்" என்று கேட்பார் "பிள்ளையா குட்டியா இவனுக்கு என்ன கேடு?" என்று அவன் சொந்த வாழ்க்கையைத் தேடி உண்மை காண முயல்வார்கள். மாண்குடிப் பிறந்தவர்க்கு இப்பழிச் சொற்கள் வந்து சேரும். அக்கு தொக்கு இல்லாமல் யாரோ எவரோ என்று வாழும் ஊதாரிகள் அவர்களைப் பற்றி யாரும் எதுவும் பேசமாட்டார்கள். அவன் தனிக்காட்டு அரசன் கடலில் மரக்கலத்தில் செல்லும் வலைஞன்; அவன் உண்டு; அவன் கை வலை உண்டு; யார் அவனைப் பற்றி விமரிசிப்பார்கள்? நாலுபேர் நடுவே வாழும் மனிதர்கள் நற்பண்புகளுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று உலகம் எதிர்பார்க்கிறது.

"ஏன்'யா? உன்னை யார் அடித்தது? எதற்காக ஊர் வம்பு?" என்று கேட்பாரும் உளர். "அது எப்படி ஒதுங்கி வாழ முடியும்? என் குடிப்பெருமைக்கு ஒவ்வாது" என்று விடை கூறுவர். "நம்மவர்களுக்கு நாம் செய்யாவிட்டால் பின் யார் செய்வார்கள்?" இன நன்மை அதைக் கருதித் தான் ஆகவேண்டும்' என்பர் வாய் திறந்து வணக்கம் என்று சொல்லாமல் தன் வழி பார்த்து விழிவைப்பாரும் உளர். "வணக்கம் என்று சொன்னால் குறைந்தாபோய்விடுவான்" என்று பேசுவர். இன் சொல் இதை மற்றவர்கள் எதிர் பார்க்கிறார்கள். "வாரிக் கொடுத்துவிட வேண்டாம்,