பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்றைய டி.வி.யில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு வினாக்களைத் தொடுத்துப் பரிசுகள் தரும் பழக்கத்தைப் புகுத்தி உள்ளனர். இதைச் சுட்டிக் காட்டும் வகையில் என் எழுத்திலும் இந்த உத்தியை எடுத்து ஆண்டுள்ளேன். இஃது அங்கதம் ஆகும்.

எதுகை மோனை நயங்கள் தமிழுக்கு உரிய தனி அழகு; அவற்றைத் தக்க வகையில் அமைத்துள்ளேன். சில புதிய சொற்களையும் துணிந்து படைத்துள்ளேன் சுவைக்காக.

தொடர்ந்து படிக்கக் கூடிய வகையில் கருத்துகள் ஆற்று வெள்ளம் போல வருவது இந்நூலின் சிறப்பாகும்.

'திருக்குறள் செய்திகள்' விரிவாக எழுத அந்நூல் இடம் கொடுக்கவில்லை. இதில் விரிவாக எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. என் முழு ஆற்றலையும் இந்நூல் எழுதப் பயன்படுத்தி இருக்கிறேன். விமரிசனம் வாசகர்களுக்கு விட்டு விடுகிறேன்.


ரா. சீனிவாசன்