பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 122 29. இன்மை அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும் பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும்; ஒத்த குடிப்பிறந்தக் கண்ணுமொன் றில்லாதார் செத்த பிணத்திற் கடை. 281 நீரினும் நுண்ணிது நெய்யென்பர்; நெய்யினும் யாரும் அறிவர் புகை நுட்பம்;-தேரின் இரப்பிடும்பை யாளன் புகுமே புகையும் புகற்கரிய பூழை நுழைந்து. 282 கல்லோங் குயர்வரைமேல் காந்தள் மலராக்கால் செல்லாவாம் செம்பொறி வண்டினம்;-கொல்லேக் கலா அல் கிளிகடியும் கானக நாட! இலா அஅர்க் கில்லே தமர். 283 உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல் தொண்டா யிரவர் தொகுபவே;வண்டாய்த் திரிதரும் காலத்துத் தீதிலிரோ என்பார் ஒருவரும் இவ்வுலகத் தில். 284 பிறந்த குலம்மாயும்; பேராண்மை மாயும்; சிறந்ததம் கல்வியும் மாயும்;-கறங்கருவி கன்மேற் கழுஉம் கணமலே கன்னட! இன்மை தழுவப்பட் டார்க்கு. 285