பக்கம்:நாலும் இரண்டும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் அப்பொருள் இழந்து, பதவி இழந்து, மான மிழந்து, மதிகெட்டு, மனைவியையும் மாற்ருன் கொளக்கெட்டொழி வர் என்பதை இப்பாடல் சுட்டிக் காட்டுகின்றது. ஆம்! பெருந் தலைவர் நிலையே இதுவாயின் மற்றவர்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ! இன்று தம்மை மறந்து தருக்கி வாழ்வோர் பெருகி விட்டமையாலேயே நாட்டிலும் உலகிலும் அவல கிலே அதிக மாக உள்ளது. எனவே இன்று இந்நாலடி மிகவும் இன்றிய மையாது வேண்டப்பெறுகின்றது. இந்த காலடியை உணர்ந்து திருந்தி வாழ வேண்டிய நிலை இன்றியமையாது மேற்கொள்ளவேண்டிய ஒன்று. மக்கள் இந்த உண்மையை உணர்ந்து வாழின் நாடும் நானிலமும் செழிக்கும். அத்தகைய ஆக்க நெறிக்கு வழிகோலி வையத்தை வாழவைக்கும் வகை யில் இந்த நாலடியின் அறம் உணர்த்தும் அதிகாலைப் பேச்சு வரிசை அமைகின்றது! இதன் வழி வையம் சிறப்பதாக! மனிதன் மனிதனுக வாழ நாலடி காட்டும் நல்வழியை நாம் பின்பற்றி உய்ந்து உயர்வோமாக! வணக்கம். 60