பக்கம்:நாலும் இரண்டும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலும் இரண்டும் மறக்கலாகாது. அடுத்து வரும் பொங்கல் விழா 'வசியும் வளமும் சிறக்கும் விழாவாக அமையவேண்டும் என்று நல்ல உள்ளங்கள் வாழ்த்துகின்றன. எனவே இடுக்கண் வருங்கால் இனிய முகத்துடன் சிரித்து, வருங் காலத்தில் வையம் வற்ரு. வளம் பெறவேண்டும் என வாழ்த்தும் நல்ல உள்ளங்கள் நமக்கு வழி காட்டிகளாக அமைய நாம் முன்னேறவேண்டும்முன்னேறுவோம் என்பது உறுதி. அகத்தும் புறத்தும் மாசகன்ற நல்ல உளத்தோடு நாம் அனைவரும் இந்தப் பெர்ங்கல் நன்ளிைல் நாடு 'வசியும் வளனும் சுரந்து ஓங்கவேண்டும் என வாழ்த்துவதுடன் அந்த நல்ல வாழ்வுக்கு அயராது உழைக்கும் ஆக்கப் பணியை மேற்கொள்ள் உறுதி பூணுவோமாக உள்ள உரமும் உடல் உழைப்பும் ஒருங்கே அமையின் நாடு நாடாகும். நாமும் தலை நிமிர்வோம்! இந்த நல்ல உணர்வோடு - நல்ல உள்ளங்கள் உறவாடும் நிலையில் இப்பொங்கல் விழாவைக்கொண்டாடிப் புத்துலகப் பொன் வாழ்வை நோக்கி நடப்போம்ாக வாழ்க நல்ல உள்ளம்: வளர்க வசியும் வளனும்! - - 88.