பக்கம்:நாவல் பழம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவாட்டின்" நறுமணம் (அப்போதெல்லாம் எங்களுக்கு ரோஜாப்பூவின் மணத்தைவிடக் கருவாட்டின் மணமே பிரியமூட்டும்.) இவைகளைச் சுவைத்துவிட்டு, ராஜா விட் டுக் கல்யாணத்திற்குப் பூசணிக்காய் பறிக்கும் விளை யாட்டில் சிறிது நேரம் சுவை கண்டோம். களத்து முற்ற? தில் பூவரச மரங்கள், ஒரு வேப்ப மரம். களத்திற்கென்றே கட்டப்பட்ட நான்கு சுவர்கள். இரண்டு களத்து வீடுகள் ... அங்கே பாட்டி கதை சொல்வாள். இறந்தவர்களின் உருவத்தை வரைந்து பூவைத்து விளக்கேற்றும் அந்தத் தரையில் பாட்டி சொன்ன கதையைக் கேட்ட போது...இடையிடையே கேட்கும் எங்கள் இரைச்சலை அடக்கவே அவள் மிகவும் சிரமப்படு வாள். மானுக்கும் மான்தோல்மேல் தவமியற்றும் துற விக்கும் ஒரு மனநிலை வரமுடியாது. அதுபோலத்தானே கதை கேட்கும் மனநிலையும், கதை படிக்கும் மனநிலையும்? நாங்கள் வளர்ந்த பிறகு ஊர்ச்சாவடி அரசமரத்தில் சிரிப்பூட்டும் கதைகளையும், பேய்க்கதைகளையும் ஒரு நண்பர் சொல்வார். குளவிக் கூடுகள் நிறைந்த அவரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/13&oldid=786026" இலிருந்து மீள்விக்கப்பட்டது