பக்கம்:நாவல் பழம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டு வாடா ஒழுங்காக நடக்கிறது. 'கிடை' குறுநாவலி லும், சிறு கதைத் துறையிலும் சாதனை நிகழ்த்திய கி. ராஜ நாராயணனின் கோதெல்ல கிராமம்' குறிப்பிடத்தக்க நாவலாகும்! அரிய செய்திகள், அவரது கிராமிய நடை இவைகளை அதில் ரசிக்கமுடிகிறது. நாகர் கோவில் பக்கம் ஒட்டியிருக்கும் புதிய எழுத் தாளர்கள் எழுதிய எல்லா நாவல்களும் செம்மீனின் நகல் களே நீல. பத்மநாபனின் தலைமுறை, உறவுகள் இவை சமூகப் பழக்க வழக்கச் சித்தரிப்பில் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடங்கிவிடுகின்றன. லா. சா. ராமாமிர்தம் எழுதிய புத்ர, அபிதா வெற்றிப் படைப்புகளே. அவை நாவல்கள் அல்ல. காவியங்கள். மனம் திறந்து எழுதுகிறேன், 'தமிழ் நாட்டில் எங்கள் அனைவரையும் விடச்சிறந்த கவிஞர் லா. ச, ரா-தான்!” இன்டுமார்க் (48 x 32) கதாசிரியர்கள் பிரபல பத்திரிகை கள் மூலம் எப்படியாவது விளம்பரமும் பணமும் சேர்க்கப் 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/20&oldid=786040" இலிருந்து மீள்விக்கப்பட்டது