பக்கம்:நாவல் பழம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"யாருக்காக அழுதான்?' நாவலில் காபி ஆற்றப் படுவது வட்டகைக்கும்... டம்ளருக்கும் பாலம் போட்ட மாதிரி என்று வரட்சியாக வர்ணிக்கப்படுகிறது. ஆளுல் ராசி தட்டுமுட்டுச் சாமான்களைப் பற்றி எழுதினாலும் அங்கே தமிழ்த் தென்றல் வீசுகிறது. 'இளமை' நாவலைப் போலவே 'வழுக்கு நிலம்’ நடை அழகிலும், நிகழ்ச்சிகளின் சித்தரிப்பிலும் முதலிடம் பெறுகிறது. வரதட்சணையை இரண்டு மணிநேரம் ஜோக் புத்தகம் வாசித்துக் காட்டுவதுபோல் சிரிப்பொலிகளுக் கிடையே நடிக்கப்படும் சபா நாடகங்களிலும், நாவல் களில் வரும் நவரசங்களில் ஒன்ருகவும் எழுதி வந்த தமிழகத்தில். இயற்கையாக அப்பிரச்சினை எப்படிக் குடும்ப உறவுகளைப் பாதிக்கிறது என்பதை 'வழுக்கு நிலம்" அழுத்தமாக எடுத்துக்காட்டுகிறது. 换 兴 熹

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/70&oldid=786146" இலிருந்து மீள்விக்கப்பட்டது