இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
306 நாவுக்கரசர்
கொண்டு உய்வித்த பெருமானது பெருங்கருணைத் திறத்தை உணர்த்தும் பாங்கில் பிழை செய்த இராவணனை உய்வித்த அருளால் குற்றமுடைய என்னை யும் கோது நீக்கி ஆட்கொண்டான்’ என உலக மக்களுக்கு எடுத்துரைக்கும் முறையில் இராவணனைப்பற்றிய குறிப் பைப் பதிகந்தோறும் விடாது குறித்தருள்கின்றார். இது திருத்தொண்டர் புராணத்தாலும் இனிது புலனாகும். இது திருக்கடைக் காப்புப் போலவும் அமைந்துள்ளது.
1. பெ. பு. திருநாவுக் 75