பக்கம்:நாவுக்கரசர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூலைநோயால் தடுத்தாட்கொள்ளப் பெறுதல் 23

உயிருடன் நலத்தையும் அருளியது என மகிழ்ந்து முதல்வன் கருணைக் கடலில் மூழ்கி இன்புறுகின்றார்: மெய் மயிர் சிவிர்க்க, கண்ணிர் மழையெனப் பொழிய நிலமிசை வீழ்ந்து புரள்கின்றார்; என்றும் வெள்ளம் ஏறாத பெருந் திடர் என அமைந்த எளியேன்பால் இவ்வாறு நின் திரு வருள் பெருவெள்ளத்தைப் பெருக்கி விடுதல் தகுமோ?! என இறைவனை உளங் கசிந்து போற்றுகின்றார். ‘பொய்ம்மை மிக்க புறச்சமயப் படுகுழியில் வீழ்ந்து எழுமாறு, இதுவென உணராது. மயங்கி அவமே செய்து கிடக்கும் எளியேன் மாமலையாள் மணவாளன் திருக் கழலடிகளை அடைந்து உய்யும் வண்ணம் இத்தகைய நல் வாழ்வைத் தந்த சூலை நோய்க்குச் செய்யத் தக்க கைம்மாறு யாதுள்ளது?’ என்று, தம்மை நல்வழிப் படுத்து வதற்குக் காரணமாயமைந்த சூலை நோய்க்கு நன்றி தெரி வித்து இறைவனைத் தொழுகின்றார். இந்த நிலையில், செந்தமிழ்ப் பதிகம் பாடிய பான்மையினால் நின் பெயர் ‘நாவுக்கரசு என உலகேழினும் நிலைபெற்று வழங்கு வதாகுக’ என்ற இறைவனின் திருவருள்வாக்கு யாவரும் கேட்கும் வண்ணம் வானின்கண் எழுகின்றது, -

இத்திருவருள் மொழியினைச் செவிமடுத்த நாவுக்கரசர் :இவ்வளவு நெடுங்காலமாக இறைவனை மறந்திருந்த தீவினையாளனாகிய எளியேனால் இத்தகைய பெருவாழ்வு அடைதற்குரியதோ?’ என வியப்புறுகின்றார். கயிலை மலை அண்ணலின் பேராற்றலை உணராமல் அம்மலையை எடுத்த இராவணனின் பெரும் பிழையைத் திருவுள்ளம் கொள்ளாமல் அவனுக்கு நீண்ட வாண்ாளையும் வாட் படையையும் வழங்கிய பெருமான் அல்லவா? இந்தப் பெருமானின் பெருங்கருணைத் திறத்தை உணர்ந்து

5. இறைவன் திருவருள் துன்பப் படுத்துவதிலும் வந்தடையும் என்பதற்கு இது நல்லதோர் எடுத்துக்காட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/66&oldid=634418" இலிருந்து மீள்விக்கப்பட்டது