பக்கம்:நாவுக்கரசர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவதிகை ஈடுபாடு

மடங்கினார்’ (4, 27) என்ற திருநேரிசைப் பதிகத்தில்,

காணிலார் கருத்தில் வாரார்

திருத்தலார் பொருத்த லாகார் ஏணிலார் இறப்பும் இல்லார்

பிறப்பிலார் துறக்க லாகார் நாணிலார் ஐவ ரோடும்:

இட்டெனை விரவி வைத்தார் ஆணலார் பெண்ணும் அல்லார்

அதிகைவி ரட்ட னாரே (8) என்பது எட்டாவது பாடல். இதில் ஒன்பதாவது பாடல் காணப் பெறவில்லை. இதிலுள்ள பாடல்கள் யாவும் பாடிப் பரவசத்துடன் அநுபவிக்க வேண்டியவை.

முன்பெலாம் (4.28) என்ற முதற்குறிப்பினையுடைய திருநேரிசைப் பதிகத்தில்,

மந்திர முள்ள தாக

மறிகடல் எழுநெய் யாக இந்திரன் வேள்வித் தீயில்

எழுந்ததோர் கொழுந்தின் வண்ணம் சிந்திர மாக நோக்கித்

தெருட்டுவார் தெருட்ட வந்து கந்திரம் முரலும் சோலைக்

கானலங் கெடிலத் தாரே. (5) என்பது ஐந்தாவது பாடல். இதில் 6,7,8,9 ஆகிய நான்கு பாடல்கள் காணப்பெறவில்லை.

மாசில் ஒள்வாள்’ (4.104) என்பது திருவிருத்த செந் தமிழ்ப் பதிகம். இதில்,

மாசிலொள் வாள்மதியோன் மறியும்

மணிநீர்த் திரைத்தொகு

நா-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/92&oldid=634449" இலிருந்து மீள்விக்கப்பட்டது