பூவை எஸ். ஆறு முகம் } 97
ஆனால்...!
ஆனால், அந்த ஸ்லா க் ைகப் போட்டு அழகு பார்த்த - அழகு காட்டிய ராஜாவைத் தான் காணோம்:
ராஜா எங்கே?
அவ ன் போய் விட்டான் !
எங்கே போய் விட்டான்?
திரும்பி வராத இடத்துக்கு போய் விட்டான்:போயே போய் வீட்டான் பயணங் கூடச் சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டானே?
அப்படியென்றால், ர ஜ திரும்பிவரமாட் டானா? திரும்பி வர வே மாட்டானா?
“ஐயோ, ராஜா!-’
தலையிலும் வயிற்றிலுமாக அடித்துக் கொண்டு அழுதாள் ; புலம்பி னாள்; துடித் தாள்; புர எண் டாள் அவள். அவள்: மீனா!-தாய்!
சின்ன குட்டி பானுவின் கவுன் கிழிந்து போயிற்று: புதுக் கவுன் வேண்டுமென்று அடம் பிடித்தாள். மீனா வுக்கு ரோதனை தாங்க முடியவில்லை, அவள் கணவன் தங்கவேலு கொத்து வேலைக்கு கோழி கூப் பிடக் கிளம்பிப் போப் விட்டான். அவன் இருந் திருந்தால், அவனே தான் அந்த ட்ரங்குப் பெட்டி யைத் திறந்து மகளுக்குக் கவுன் எடுத்துக் கொடுத் திருப்பான். இப்போது சுமை மீனாவின் நெஞ்சில் ஏறியது. கவுனை எடுத்துக் கொடுத்தவளுக்குச் சு மை இறங்கவில்லை. சுமையோடு சுமையை ஏற்றி