பக்கம்:நிதர்சனங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரை. இராமு பதிப்பகம். t, பிள்ளையார் கோயில் தெரு, பழிை ய த ம்பர ம்; சென்னை-600 045.

பதிப்புரை

எழுதுவது என்பது எளிதல்ல சிறப்பாக எல் லோரும் படிக்கக் கூடிய கதைகளை எழுத தனி ஆற்றல் வேண்டும். சிலர் எழுதுவது அறிஞர்களுக்கு மட்டுமே விளங்கும். இன்னும் சிலர் பாமரர்களுக்கு மட்டுமே எழுதுவர். சிலர் இந்த இருசாராரையும் மகிழ் விக்க முடியாமல் தங்கள் எழுத்துக்களை வடிப் பார்கள். மிகச் சிலரே தாங்கள் வடிக்கும் எழுத்துக் களை எல்லோரும் மகிழ்வுடன் ஏ க்கும் படிச் செய் : : II 45 6:: -

இம் மிகச் சி ல ரி ல் ஒருவராக விளங்குபவர் திருமிகு, பூவை. எஸ். ஆறுமுகம் அவர்கள். எளிய வாழ்க்கைக்கு உதாரணமாகத் திகழும் அவருக்கு என்று ஒரு தனி நடை; மிகச் சிறந்த உண்மைகள் எல் லாம் மிக எளிமையாக உள்ளன என்ற கருத்தை எல் லோரும் ஏற்கும் வண்ணம் எழுதும் ஆற்றல்; வாசகர் கள் குழம்பிப் போகாமல் தெளிவாகத் தன் கருத்துக் களைக் கூறும் பாங்கு: ஒவ்வொருவருக்கும் இன்பமாக வாழ அத் தியாவசியமான அறநெறிகளுக்கு அவர் அளித் திடும் உயரிய மதிப்பு; இவை . அனைத்தும் அவருக்கு க் கை வந்த கலை.

அன்னாருடைய நிதர்சனங்கள் எனும் இச்சிறு கதைத் தொகுப்பு நூலை வெளியிடுவதில் பெருமைப் படுகிறோம். --

அன்புள்ள,

துரை. இரா.மு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/9&oldid=681107" இலிருந்து மீள்விக்கப்பட்டது