கலைஞரின் சட்டமன்ற உரைகள்
173
ள
400 ரூபாய் மாத வருமான வரம்புக்கு உட்பட்டு வழங்கப்படுகிறது என்றும், இந்த வரம்பை அறவே நீக்கவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்கள். தற்போதுள்ள முறைப்படி தீ விபத்து வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் ஏற்படுகின்ற விபத்துக்களால் அல்லலுறுகின்ற மக்களுக்கு உதவி அளிப்பதில் வருமான வரம்பு 400 ரூபாய் என்று கணக்கிடப்பட்டு வழங்கப்படுகின்றது. இம்முறை பின்பற்றப்படுவதால், தாமதங்களும், தடங்கல்களும் ஏற்படுகின்றன. குடிசைவாழ் மக்கள் பாதிக்கக்கூடிய நேரத்தில் இனிமேல் உடனடியாக நிவாரணம் அளிப்பதற்கு வருமான வரம்பு இன்றி நிவாரணம் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
.
நிதிநிலை அறிக்கையில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்விச் சலுகை சலுகை பெறுவதற்குப் பெறுவதற்குப் பெற்றோர்கள் ஆண்டு வருமான வரம்பு ரூபாய் 5,000 என்பதை ரூபாய் 12,000 ஆக உயர்த்தி நிர்ணயம் செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைப்போலவே ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் நலனுக்காக குடியரசுத் தலைவர் ஆட்சியிலே கல்விச் சலுகை வழங்க பெற்றோர்கள் ஆண்டு வருமான வரம்பு ரூபாய் 12 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டது, அதை மேலும் உயர்த்தி ரூபாய் 15 ஆயிரம் என்று இந்த ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த ஆணைகள் பிறப்பிக்கப்படும்.
வாகன வரி, வரவு செலவுத் திட்டத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லும் வேன்களில் அனுமதிக்கப்படும் இருக்கை அளவினை விரிவுபடுத்த வேண்டுமென்ற கோரிக்கை ஏற்கப்பட்டு, இருக்கை அளவு 12 ஆக உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில் இருக்கை ஒன்று வரி விகிதம் ஒவ்வொரு கால ஆண்டுக்கும் ரூபாய் 150 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருக்கை அளவு 6லிருந்து 12ஆக உயர்த்தியது. இப்படிப்பட்ட ஊர்திகள் பல இன்னல்களுக்கு உட்படாமல் செயல்பட வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு செய்யப்பட்டது. அதே நேரத்தில் இந்த வேன்கள் வாடகைக்கு விடப்படுவதால், வரி விகிதமும் ஒழுங்குப்படுத்தப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வரவு-செலவு அறிக்கை வெளியிட்ட பின்