உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

நிதிநிலை அறிக்கை மீது

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: தலைவர் அவர்களே, ரம்ஜான் என்பது பட்டினி கிடக்க வேண்டிய நாள். எனக்குத் தெரிந்தது கூட இஸ்லாமிய சகோதரர் அவர்களுக்குத் தெரியவில்லையே... (சிரிப்பு)

திரு. எம். அப்துல் லத்தீப்: தலைவர் அவர்களே, அந்த மாதம் நோன்பு வைத்து ரம்ஜான் திருநாள் வருகிறது. எனவே, அந்த ரம்ஜான் திருநாள் என்பது அதிகமாகச் சாப்பிடக் கூடிய நாள். ஆகவே, அந்த வாய்ப்பை கிறிஸ்துமஸ்ஸிற்கும் ரம்ஜானிற்கும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: தலைவர் அவர்களே, அதிகமாகச் சாப்பிடுகிற காரணத்தால்தான் ஏற்படுத்த முடியுமா என்று யோசிக்கிறோம். (சிரிப்பு)

தலைவர் அவர்களே, அவர்களே, நம்முடைய மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் திரு. ரமணி அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னார்கள். 18 வயது வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுமென்ற கருத்திலே இங்கே கருத்துப் பரிமாற்றம் நடைபெற்று வாக்கெடுப்பு நடைபெற்றபோதுகூட அவர்கள் இதில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்புச்

செய்து

அவர்களுடைய எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள். எனவே இந்த 18 வயது உள்ளவர்கள் வாக்களிக்கவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். நான் அப்போதே சொல்லியிருக்கிறேன். விரைவில் 18 வயது வாக்காளர் களுடைய பட்டியல் பூர்த்தி அடைந்து விடுமானால் இன்றைக்குக் கொண்டு வருகிற சட்டத்தில் ஒரு திருத்தம் செய்து உடனடியாக இரண்டு மாதத்திற்குள் தேர்தல் நடத்த முடியுமென்றால், நடத்துவதாக நான் சொல்லியிருக்கிறேன். 18 வயது வாக்காளர்களுடைய பட்டியல் 23.5.1989க்குள் அதாவது மே மாதத்திற்குள் முடிந்துவிடுமென்று சொல்லப் பட்டிருக்கிறது. எனவே,

மே மாதத்திற்குள் முடிந்து விடுமென்கிற கருத்து இருக்கிறது. அதே நேரத்தில், மே மாதம் 12 ஆம் தேதியன்று தேர்தலை நடத்துவது என்பது இயலாது. ரம்ஜான் பண்டிகை இருக்கிற காரணத்தால் வாக்கு சேகரிக்க, பிரச்சாரம் செய்ய இயலாது என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பிலும், வெளியே உள்ள மற்ற முஸ்லீம் இயக்கங்களின்