கலைஞரின் சட்டமன்ற உரைகள்
221
நலனில் இந்த அரசு மேலும் அக்கறை காட்ட வேண்டுமென்று
சொன்னார்கள்.
தொழிலாளர்கள்
பிரச்சினையில்
சுரண்டப்படுவது, அச்சுறுத்தப் படுவது, அவர்களுடைய உரிமைகள் பறிக்கப்படுவது, அவர்கள் வாழ்வு இழந்து வாடிவதங்கி தெருவில் நிற்பது போன்ற இந்த நிலைமைகளை எல்லாம் இந்த அரசு ஏற்காது என்பதும், இந்த அரசின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிற நான் பாட்டாளிகளுடைய பிரச்சினையில் தொழிலாளர்களுடைய கடந்த காலங்களில் எப்படியெல்லாம் தொழிற்சங்கத் தலைவர்களோடு இணைந்து நின்று போராடி இருக்கிறேன். ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதுகூட எப்படியெல்லாம் அவர்களுக்காக வாதாடி இருக்கிறேன் என்பதும், நான் அவர்களுக்கெல்லாம் நினைவூட்ட வேண்டிய அவசியம் இல்லை. அனுபவ ரீதியில் அவர்கள் அதை மிக நன்றாக உணர்வார்கள்.
திரு.ரமணி அவர்கள் குறிப்பிட்டார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்கள் சட்டம், தமிழ்நாடு கைத்தறி தொழிலாளர்கள் சட்டம் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தும் சட்டம், சம்பளப் பட்டுவாடச் சட்டம், பணிக்கொடை பட்டுவாடாச் சட்டம், தொழிற்சாலை சட்டம், ஈ.எஸ்.ஐ. சட்டம் போன்ற சட்டங்கள் சரிவர அமல் செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டார்கள். இதிலே ஒவ்வொன்றாக சில விளக்கங்களைச் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன்.
ஒப்பந்தத் தொழிலாளர்கள் அதாவது நீக்கல், முறைப்படுத்துதல் என்ற சட்டத்தைப் பொறுத்தவரையில் மாநில மட்டத்தில் ஒரு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு, அதிலே தொழிற்சங்கப் பிரதிநிதிகள், நிர்வாகப் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள். இந்தக் குழு அடிக்கடி கூடி தொழில் நிறுவனங்களில் இருக்கிற ஒப்பந்தத் தொழிலாளர்களை நீக்கி முறைப்படுத்துதல் பற்றி ஆராய்ந்து ஆலோசனை வழங்கி அதன்மீது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களை எப்படி நீக்க வேண்டும், முறைப்படுத்த வேண்டும் என்று இருக்கிறதே அல்லாமல், அவ்வாறு