உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

283

உள்ள

நான் ஏற்கெனவே வெளியிட்டு, அதன்படி, மாவட்டங்களைப் பிரிப்பதற்காக அந்த அந்தப் அந்தப் பகுதிகளிலே பொதுமக்களின், அவர்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களை அறிந்து, அரசாங்கத்திற்குத் தெரிவிப்பதற்காக ஒரு குழு பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டது. அந்தக் குழுவின் தலைவர் - வருவாய்த் துறை தலைமை ஆணையர், குழுவின் உறுப்பினர்கள் - நில நிர்வாகத்துறை ஆணையர், இணை ஆணையர் (வருவாய் நிர்வாகம்), இயக்குநர் (நகராட்சி நிர்வாகத்துறை), இயக்குநர் (ஊரக வளர்ச்சித்துறை). இந்தக் குழுவின் பரிந்துரைக்கேற்ப இன்று காலையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, உருவாகின்ற புதிய மாவட்டங்கள் பற்றிய விவரங்களை இங்கே நான் கூற விரும்புகிறேன். அது பற்றிய விவரம் வருமாறு:-

மதுரை மாவட்டம். ஒன்றியத் தேர்தல் எல்லாம் வருகின்ற காரணத்தினால், ஒன்றிய அளவிலே எந்த எந்த மாவட்டங்களிலே எந்த எந்த ஒன்றியங்கள் இருக்கு மென்பதை மாத்திரம் இங்கே எடுத்துக்காட்டுகின்றேன். திருப்பரங்குன்றம் ஒன்றியம், மதுரை கிழக்கு ஒன்றியம், மதுரை மேற்கு ஒன்றியம், மேலூர் ஒன்றியம், கொட்டாம்பட்டி ஒன்றியம், வாடிப்பட்டி ஒன்றியம், அலங்காநல்லூர் ஒன்றியம், உசிலம்பட்டி ஒன்றியம், செல்லம்பட்டி ஒன்றியம், திருமங்கலம் ஒன்றியம், கள்ளிக்குடி ஒன்றியம், டி.கல்லுப்பட்டி ஒன்றியம், சேடப்பட்டி ஒன்றியம் ஆகியவை மதுரை மாவட்டத்தில் அடங்கும்.

வைகை மாவட்டம் என்ற பெயர் வேண்டுமென்று சிலர் விரும்பினார்கள். வீரன் அழகுமுத்து மாவட்டம் என்ற பெயர் வேண்டுமென்று சிலர் விரும்பினார்கள். என் விருப்பமும் அதுவே, எனவே, இருவரையும் திருப்திப்படுத்துகின்ற வகையில் 'வீரன் அழகுமுத்து வைகை மாவட்டம்' என்று பெயர் வைத்து. அதில் பெரியகுளம் ஒன்றியம், தேனி ஒன்றியம், ஆண்டிப்பட்டி ஒன்றியம், கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியம், உத்தமபாளையம் ஒன்றியம், கம்பம் ஒன்றியம், சின்னமனூர் ஒன்றியம், போடிநாயக்கனூர்

-