உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

311

பின்பற்றியும், மாநில அரசால் வரையறுக்கப்படக்கூடி நடைமுறைகளைப் பின்பற்றியும் அப்பணிகளை நிறைவேற்றி வைப்பார். நகரப் பகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகளைப் பொறுத்தவரையில் நாடாளுமன்ற உறுப்பினர் விருப்பப்படி மாநகராட்சிகள், நகராட்சிகள் முதலியவற்றின் ஆணையாளர்கள் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரில் ஏதேனும் ஒரு அலுவலர் அல்லது அமைப்பின் மூலம் இப்பணிகள் நிறைவேற்றப்படலாம்.

பணிகளைச் செயல்படுத்தும் முகவர் அமைப்புகள், ஏஜென்சீஸ், அரசாகவோ அல்லது ஊராட்சி நிறுவனங் களாகவோ அல்லது இப்பணிகளை மனநிறைவு அளிக்கத்தக்க வகையில் செய்து முடிப்பார்கள் என்று மாவட்ட ஆட்சித் தலைவரால் ஏற்றுக் கொள்ளக்கூடிய சிறந்த அரசுசாரா தன்னார்வத் தொண்டு நிறுவனமாகவோ இருக்கலாம். நாடாளுமன்ற உறுப்பினரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பணி எந்த ஏஜென்சி மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர் முடிவு செய்வார். இத்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளக்கூடிய பணிகள் என்னென்ன, மேற்கொள்ளப்பட முடியாத பணிகள் என்னென்ன என்பதையும் மத்திய அரசு வரையறுத்திருக்கிறது. இதிலே மார்க்சிஸ்ட் கட்சியினுடைய தலைவர் திரு. மணி அவர்கள் பேசும்போது குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த எம்.பி. திட்டத்திலேயே நிறைய புகார் வந்தது. இதிலே உங்களுக்கு எவ்வளவு, எனக்கு எவ்வளவு என்றெல்லாம் பேரம் பேசினார்கள் என்று சொன்னார். அதற்கு இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் தனிப்பட்டவரிடத்திலே பணத்தைக் கொடுப்பதாக இல்லை. ஒரு அமைப்பிலே கொடுத்துவிட்டு, இவர்கள் யோசனைகளைச் சொல்லி, அவர்கள் மூலமாக அந்தப் பணத்தை ஒதுக்குகிறார்கள் என்றுதான் இருக்கிறது. ஒரு வேளை இந்த அமைப்பே தவறு செய்தால் அதை நாம் என்ன செய்ய முடியும்? இருந்தாலும்கூட, நல்லவைகளைத்தான் நாம் சிந்திக்க வேண்டும். நல்லவைகள் நடைபெறுவதற்கு நாம் நம்முடைய செயல்பாடுகளை முடுக்கிவிட வேண்டும். இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் பணிகளை மத்திய அரசு கோடிட்டுக் காட்டியிருக்கிறது, பட்டியலிட்டிருக்கிறது. பள்ளிகள், மாணவர்கள் இல்லங்கள்,