கலைஞரின் சட்டமன்ற உரைகள்
321
வரவு-செலவுத் திட்டத்தைப் பற்றி திருநாவுக்கரசு அவர்கள் பேசும்போது ஒன்றைச் சொன்னார்கள். 1996 - 97 இலே திட்ட மதிப்பீட்டில் வருவாய்க் கணக்கிலே வரவு 11,068 கோடி ரூபாய் என்றும் வருவாய்க் கணக்கிலே செலவு 12,106 கோடி ரூபாய் என்றும் 1038 கோடி ரூபாய் பற்றாக்குறை என்றும் இருந்து, திருத்த மதிப்பீட்டில் வரவு 11,760 கோடியாக, 700 கோடி ரூபாய் உயர்ந்தபோதிலும், பற்றாக்குறை 1,286 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதற்குக் காரணம் என்ன என்று கேட்டார்கள். அதிலே உள்ள 4 வரிகளிலே 3 வரிகளை மாத்திரம் அவர் பார்த்திருக்கிறார். 4 வது வரியிலே திருத்த மதிப்பீட்டில் வரவு 11,760 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டிருக்கும்போது, செலவுக் கணக்கிலே, அதே வரியில் 13,047 கோடி ரூபாய் என்று இது உயர்ந்த காரணத்தால்தான் பற்றாக்குறை உயர்ந்திருக்கிறது என்பதை அவர்களுக்கு விளக்கமாக நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
ரூ. 11,068 கோடிக்கு நேராக ரூ. 11,760 கோடி;
ரூ. 12,106 கோடிக்கு நேராக ரூ. 13,047 கோடி என்று இருப்பதை அவர் பார்க்காமல் விட்டுவிட்ட காரணத்தால் அல்லது சொன்னவர்கள் சுட்டிக்காட்டாமல் விட்டுவிட்ட காரணத்தால் (மேசையைத் தட்டும் ஒலி) இந்த...
திரு. எஸ். திருநாவுக்கரசு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நானே படித்துவிட்டு வருவதுதான், யாரும் சொல்லிக் கொடுத்து வந்து பேசுவது இல்லை. 6 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன்.. விடிய விடிய படித்துவிட்டு வந்துதான் பேசுகிறேன். எதனால் அந்த டிபரன்ஸ் 700 கோடி ரூபாய் அளவுக்கு வந்தது? வருவாய் இவ்வளவு, செலவு இவ்வளவு, வருவாயைக் காட்டிலும் செலவு கூடியிருக்கிறது. இவை இரண்டையும் சொல்லித்தான் சொல்ல வேண்டும். ஆனால் அதைக் குறிப்பிடவில்லை. அவ்வளவுதான்.
நான்
நான்
மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி: அதைக் குறிப்பிட்டிருந்தால் இந்தக் குழப்பம் வராது என்பதற்காகத்தான் சொன்னேன். நானும் விடிய, விடிய படித்துவிட்டுத்தான் வருகிறேன். நானும் அதிகாரிகள் சொல்வதைக் கேட்டுத்தான் சில சமயங்களில் பேச வேண்டியதாக இருக்கிறது. அது
இ