உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

நிதிநிலை அறிக்கை மீது

அந்த வரி மூலமாக கிட்டுகின்ற வருமானம் செலவிடப்பட வேண்டும் என்றும், எனவே அந்த வரியை விதிக்க வேண்டும் என்றும் என்னிடத்திலே நண்பர் முனுசாமி பல முறை கேட்டும் கூட நான் இதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. அதைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்துவிட்டோம். அந்த வரி விதிக்கப்படவில்லை. இப்போது விதிக்கப்பட்டு இருக்கிறது சர்க்கரை, துணி, புகையிலை, சிமெண்ட், காகிதம் மருந்து ஆகிய இத்தனை பொருட்கள் மீது, எல்லா வணிகர்களும் இன்றைக்கு சேர்ந்து கோரஸ் பாடுகிறார்கள். பஜனை பாடுகிறார்கள். இனிமேல் எங்களுடைய வாழ்வே போயிற்று. ரகுபதி ராகவ ராஜாராம், பதீத பாவன சீத்தாராம் என்று, தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆகவே இப்படி அவர்கள் பஜனை பாடிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த அளவிற்கு கடைகள் அடைப்பு என்றும், பேரணிகள் என்றும் வியாபாரிகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வரியை நீக்க வேண்டுமென்பது என் கருத்து மாத்திரமல்ல நுழைவு வரி என்ற தலைப்பே நீக்கப்படவேண்டுமென்பது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கருத்து மாத்திரம் அல்ல. இந்த வரிசையிலே அமர்ந்திருக்கின்ற அத்தனை பெயர்களுடைய கருத்து என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் நான் அதிக வேகமாகப் பேசுகின்ற காரணத்தால் ஒரு வேளை ஆதாயம் வேறு யாருக்காவது போய்ச் சேரக்கூடும் என்றாலும் கூட நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. யாராவது ஆதாயம் பெறட்டும். நகர்ப் புறங்களிலே வாழ்கின்ற நண்பர் திரு. நெடுமாறன் எடுத்துக் காட்டியதைப்போல 33 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக வணிகர்கள் தங்களுடைய சுயலாபத்திற்காக என்ன விலை கொடுத்தாலும், என்ன தியாகம் செய்தாலும் அதை அவர்கள் தடுத்து நிறுத்த வேண்டுமென்ற முயற்சியிலே அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எல்லாம் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். ஆளும் கட்சிக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். எனவே இந்த வரியை நீக்க வேண்டுமென்பதில் எதிர்க்கட்சிகள் அனைத்துக்கும் சாதாரண வணிக மக்களுடைய பிரதிநிதிகள் இந்த அவையிலே