கலைஞரின் சட்டமன்ற உரைகள்
379
டு விசாரணை நடத்தச் சொன்னேன். அந்தக் கிணற்றில் வெடி பொருட்கள் எதுவும் இல்லை என்றும், அந்த கிணற்றின் சுற்றுப்புறங்கள் எல்லாம் சோதனை செய்யப்பட்டதில் வெடி பொருட்கள் எதுவும் இல்லை என்றும், கிணற்றின் சுற்றுச்சுவர் வலுவற்றதாக இருந்ததால் சுவர் இடிந்து கிணற்றுக்குள்ளே விழுந்ததாகத் தெரிவதாகவும் போலீசார் எனக்கு விவரம் கூறினார்கள். அதனாலே, கிணற்றுக்குள்ளே வெடிகுண்டு இல்லையென்று சொல்லமாட்டேன். எத்தனையோ
கிணறுகளில் வெடிகுண்டு இருந்து கண்டுபிடிக்கப்படுகிறது. அவற்றை யெல்லாம் கண்டுபிடிப்பதற்காகத்தான் போலீசார் இன்றைக்கு அயராத முயற்சிகளிலே ஓய்வு இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகின்றேன் எனவே, வெடிகுண்டு கண்டுபிடிப்பதே இன்றைக்கு ஒரு பெரிய குற்றம் என்று அரசியல்வாதிகளால் நாட்டிலே பேசப்படுகிறது. வெடிகுண்டுகளைப் போலீசார் கணடுபிடித்தார்கள். கேரளா வரையிலும் சென்று அங்கே உள்ளவர்களையெல்லாம் கைது செய்தார்கள். இந்த வெடிகுண்டு தீவிரவாதத்திற்கு யார் யார் காரணமோ அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டிருக் கிறார்கள் என்று பின்னப்படு கின்ற சதிவலையை நல்லமுறையிலே ஆராய்ந்து அறிவித்துக் கொண்டிருக்கிற போலீசாரைப் பாராட்டுவதற்குப் பதிலாக, அவர்கள்மீது குறை சொல்லப்படுகிறது. எங்கு பார்த்தாலும் குண்டுகளா என்று கேட்கிறார்கள். எடுக்காவிட்டாலும் குற்றம்; எடுத்தாலும் குற்றம் என்ற நிலையிலே இன்றைக்கு அரசியல் போய்க் கொண்டிருக்கிறது. நான் அதைப்பற்றி யெல்லாம் விரிவாகப் பேசவிரும்பவில்லை. இந்த அவையிலே அதைப்பற்றி விரிவாகப் பேசியிருக்கின்றோம். ஒன்றை மாத்திரம் சொல்ல விரும்புகிறேன். நம்முடைய இந்திய தேசிய கட்சியினுடைய தலைவர் அப்துல் லத்தீப் அவர்கள் பேசினார்கள். அதேபோல, நம்முடைய திருநாவுக்கரசு அவர்கள் பேசினார்கள். அப்பாவி முஸ்லீம்கள் எல்லாம் இந்த விவகாரத்திலே கைது செய்யப்படுகிறார்கள் என்று சொன்னார்கள். அப்படி வருகின்ற புகார்கள், குற்றச்சாட்டுகள், உடனடியாகக் கவனிக்கப்பட்டு, அவர்கள் விடுவிக்கப்படுகின்றார்கள்.
லீக்