கலைஞரின் சட்டமன்ற உரைகள்
நம்முடைய
91
மாண்புமிகு
சுயாட்சி என்ற சொல்லை முதலமைச்சரவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா, ஒப்புக் கொண்டிருக்கிறார்களா என்றால், இல்லை. நான் அப்போதே கேட்டேன். முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் கொச்சிக்கு ஒரு முறை 1983ஆம் ஆண்டு சென்றிருந்தபோது, மாநில சுயாட்சி பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது,
ல
The Tamil Nadu Chief Minister Thiru M.G.Ramachandran said here today that he would welcome any move for joint effort by the southern states for more powers to States. Any such move would get the full support of Tamil Nadu Government, he said answering at a crowded Press Conference. "But we are not for State Autonomy, he clarified."
என்ற எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் வாசகத்தைப் படித்துக் காட்டினேன். அப்போது மாண்புமிகு முதல்வர் அவர்கள் குறுக்கிட்டு, "இன்னொரு விளக்கத்தையும் அங்கே சான்னேன், அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள், அது பத்திரிகையில் வராததற்கு நான் பொறுப்பல்ல, ஸ்டேட் அட்டானமி என்று சொன்னால் பிரிவினை என்ற பொருள் கொடுத்துவிடும். ஆகவே அந்த வார்த்தையை மாத்திரம் மறுக்கிறேன் என்று சொன்னேன். அது பத்திரிகையில் வரவில்லை" என்று 1983ஆம் ஆண்டில் குறிப்பிட்டார். நான் உடனே சொன்னேன். 'இல்லை, இல்லை, நீங்கள் சொன்னது 'இந்து' பத்திரிகையில் பத்திரிகையில் வந்தது அதையும் படித்துக் காட்டுகிறேன்” என்று படித்துக் காட்டினேன்.
"Differentiating between autonomy and additional powers
for States, Mr.M.G.Ramachandran said he was hesistant to use the term 'State Autonomy' because it was being understood as 'separation.'
மாநில சுயாட்சி என்று சொன்னால் அது பிரிவினை வாதம் ஆகிவிடும் என்பதற்காக அப்படிச் சொல்ல தயங்கியதாக மாண்புமிகு முதல்வர் கூறியதாக 'இந்து' பத்திரிகையில் வந்ததை சட்டசபையில் 14.3.1983 அன்று நான் படித்துக் காட்டினேன். அப்பொழுது அவர்கள் 'ஸ்டேட் அட்டானமி' என்ற வார்த்தையை ஒத்துக்கொள்ள முடியாது.