பக்கம்:நித்தியமல்லி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


"கொஞ்சம் ஹார்லிக்ஸ்...ஒருடோஸ் கொடுங்கள்.' 'ஆகட்டும், டாக்டர் ஸார்.' டாக்டர் மோகனசுந்தரம் அப்போது தமிழ்ச்சுடரி டமும் உதயணனிடமும் சொல்லிக்கொண்டு நகர லாஞர். - இதழ்களைத் திறந்து வாய் இடுக்கில் ஹார்லிக்ஸ் கலவை நீரை ஊற்றினன் உதயணன். தமிழ்ச்சுடர் டவலை எடுத்து, அவரது இதழ்களில் வழிந்த ஹார்லிக்ஸ் கலவையைத் துடைத்தாள். விடிைகளின் தேய்வுக்குப் பின்னே, ஆனந்தரங்கம் மெல்லக் கண்களைத் திறந்தார். அவர் விழிகளை உருட்டி உருட்டி விழித்தார். பிறகு அவர் பார்வை தமிழ்ச்சுடர் .பால் நிலைத்தது. 'அம்மா! நீயா?' என்ருர். "ஆமாங்க, ஐயா!' அவரால் எழுந்திருக்க முடியவில்லை. "உன் அம்மா வரவில்லையாம்மா?" х தமிழ்ச்சுடர் தலையை உலுக்கிளுள் இல்லை' என்ற பாவனையில். "இன்னுமா உன் அம்மாவுக்கு என் பேரிலே இருக் கிற வன்மம் குறையலை?” . அவரால் அதற்குமேல் பேச முடியவில்லை. அவரது கண்களினின்றும் கண்ணிர் காட்டாற்று வெள்ளமாகப் புரண்டது. - - - இன்னும் என்னவோ சொல்ல வாயெடுத்தார். அவரால் முடியவில்லை. அதற்கு அவர் தம் நெஞ்சை இறுக்கிப் பிடித்தவாறு, மீண்டும் கண்களை மூடிக்கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/33&oldid=1277302" இலிருந்து மீள்விக்கப்பட்டது