68
கடிதத்தை மடித்து அந்த தந்தப்பெட்டியில் அமரிக்கையாக வைத்தாள். அடியில் இருந்த வைரப் பொருள் அவள் நோக்கில் தட்டுப்படவில்லை. ஆனல், தந்தப்பெட்டியின் ஒய்யார அழகு மட்டும் அவளது: பார்வையில் தட்டுப்பட்டது.
மீண்டும் நீள் மூச்சுவழிந்தது. இளம் நெஞ்சகம் எம்பி எம்பித் தணிந்தது. மையத்தில் பதிந்திருந்த். தங்கச் சங்கிலியின் டாலர் அமைதியுடன் இருந்தது!
ஒவ்வொரு கண்ணிர்த்துளியையும் ஒவ்வொரு படிக் கட்டில் சமர்ப்பித்தவளாக, முன்னேறிக்கொண்டிருந்: தாள் கன்னி தமிழ்ச்சுடர்!
10. இது என் சொந்தமுடிவு!’
'இந்தியப் பாதுகாப்பு விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இடதுசாரி கம்யூனிஸ்ட் தலைவர் ஈ. எம். எஸ். நம்பூதிரிபாடு மற்றும் பன்னிரண்டு. இடதுசாரி காவல் கைதிகள் இன்று பிற்பகல் முதல் திருவனந்தபுரம் மத்தியச் சிறையில் காலவரையின்றி. உண்ணுவிரதம் துவக்கியுள்ளனர்!
செய்தித்தாள் சூடான செய்தியைச் சொன்னது.
பத்திரிகையைப் புரட்டிய மரகதத்தம்மை ஒர். அரைவினடி அச்செய்தியில் கட்டுண்டு இருந்துவிட்டு, தன் நினைவை மீட்டுக்கொண்டாள். இதே காட்சி வருகிற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எப்படி யெப்படி மாறுமோ? யார் கண்டது?’ என்ற அரசியல் விசாரத்தில் மூழ்கவும் அவளுக்கு மனம் இருந்தது. இதற்குரிய காரணத்தைக் கொண்டு செலுத்தியவர். அவளது கணவர் குணசீலனே ஆவார். அரசியல்வாதப்