பக்கம்:நித்திலவல்லி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

நித்திலவல்லி / முதல் பாகம்


ஒன்றில் போய் அவனோடு அமர்ந்தான் இளையநம்பி. அவன் வாயிலிருந்து அடித்த தேறல் நாற்றம் பொறுக்க முடியாத தாயிருந்தது. அந்தக் களப்பிர இளைஞன் நல்ல உடற் கட்டுடையவனாக இருந்தான். எந்த அபாயத்தையோ எதிர் பார்த்து அவனிடம் பாலியில் பேசப் புகுந்ததன் விளைவு கள் வெறியில் அவன் அரற்றும் சிருங்காரக் கவிதையைக் கேட்க வேண்டிய தண்டனைக்குத் தன்னை ஆளாக்கி விட்டதே என்ற வெறுப்புடன் அமர்ந்திருந்தான் இளையநம்பி. அந்தக் களப்பிர இளைஞன் திரும்பத்திரும்ப அரற்றியதைத் தமிழில் நினைத்துக் கூட்டிப் பார்த்தால், இப்படி வரும் போலிருந்தது:-

"கட்டித் தழுவிட ஓர்இளம்
கன்னிகை வேண்டும் இங்குநான்
மட்டும் படமுடியாக் காமத்தால்
மனமும் உடலும் எரிகையிலே
முட்டும் இளநகில்கள் மோதிடவே என்
மேனி முழுமையும் வெது வெதுப்பாய்ப்
பட்டுப் பெண்ணுடல் பட்டுக் கலந்தவள்
பருகிச் செவ்விதழ் தரவேண்டும்...”

உயர்ந்த கல்வியும், நல்ல குடிப்பிறப்பும் உடைய அவனுக்கு இதை இரண்டாவது முறை நினைத்துப் பார்க்கக்கூடக் கூச்சமாயிருந்தது. காதல் வெறியில் அந்தத் திருக்கானப்பேர்ப் பித்தன் உளறும் கவிதையில் இருந்த நயம்கூட இந்தக் கள்வெறிக் களப்பிரனின் பாடலில் இல்லாததை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து அவன் உணர முடிந்தது. காதலிற் பிறக்கும் சொற்களையும், காமத்திற் பிறக்கும் சொற்களையும் தரம் பிரிக்க இந்த இருவர் நிலைகளும் அவனுக்குப் பயன்பட்டன.

இப்படித் திரும்பத் திரும்ப இந்தப் பாடலை அரற்றிய படியே மெல்ல மெல்லக் குரல் ஒய்ந்து தூங்கிவிட்டான் அந்த இளைஞன். அவனுடைய குறட்டை ஒலி செவித் துளைகளை அறுப்பது போல் ஒலிப்பதைப் பொறுக்க முடியாமல் எழுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/63&oldid=715221" இலிருந்து மீள்விக்கப்பட்டது