பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 நினைவுக் குமிழிகள்-1 வரைபடத்தைப் போட்டு மாணாக்கர்களைச் சிந்திக்க வைப்பார். துப்புத்துலங்காமல் விழிக்கும் எங்களை வரை படத்தில் வனை வழியை (Construction) வரைந்து மேலும் சிந்தனையைத் துரண்டுவார். அலங்காரத்தீபம் காட்டும் போது கருவறையில் ஆண்டவனின் திருவுருவம் நன்கு புலப் படுவது போல் வனைவழி வரைந்து காட்டியவுடன் கணக்கின் தீர்வு (Solution) பளிச்சென்று பலருக்குத் தட்டுப்படும். வினாக்களை விடுத்துக் கொண்டே மாணாக்கர் கூறும் விடை யைக் கொண்டே படிப்படியாகக் கணக்கின் தீர்வை எழுதிக் காட்டுவார். எங்கட்கெல்லாம் இராமலிங்க அடிகள் காட்டும் 'ஜோதி'யைத் தரிசித்தது போன்ற உணர்வு கிளர்ந்தெழும். கே.ஆர். நல்ல அநுபவம் பெற்றவர்: கருவிலே திருவுடையவர். அதாவது பிறவியிலேயே ஆசிரியக் கூறு வாய்க்கப் பெற்றவர். பயிற்சிக் கல்லூரியில் தாம் பெற்ற பயிற்சியும் நீண்டநாள் கற்பித்த அநுபவமும் அவரை சிறந்த ஒர் ஆசிரியராகச் செய்துவிட்டன. தவிர, இவர் கல்வி புகட்டுதலில் மாணாக்கன்தான் மையமேயன்றி புகட்டப் பெறும் பாடமல்ல என்ற ரூஸோவின் கொள்கையை மறையாகக் கொண்டு கற்பித்த பெருமகனார். முலைப் பாலையும் விலைப்பாலையும் குழந்தையின் செவ்வியறிந்து ஊட்டும் அன்னையைப் போலவே, மாணாக்கர்களின் மன நிலை தெரிந்து விதிவருமுறையையும் (Inductive method) விதிவிளக்கு முறையையும் (Deductive method) கலந்து கையாளும் வித்தகர். இவர் கற்பித்த முறைதான் பட்டப் படிப்பு வரையிலும் என்னைக் கணிதத்தில் தலையாய மாணாக்கனாகத் திகழச் செய்தது என்பதை பக்தியுடனும் நன்றியுடனும் நினைவு கூர்கின்றேன். அடுத்து, வேதியியலைக் கற்பித்த T.K. இராமநாத பிள்ளை நினைவுக்கு வருகின்றார். இவர் சரியான இளைஞர்.