பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXV இந்த நிலையில் எனக்கு உடல்நலமும் மனவளமும் எதையும் தாங்கும் இதயமும் நல்கி என்னைத் தமிழ்ப் பணியில் ஈடுபடுத்தியும், சமய நூல்கள் வெளிவரக் கணிச மான அளவு நிதி வழங்கத் திருவருள் புரிந்தும் என்னை வாழ் விக்கும் ஏழுமலை அப்பனை, உளன் கண்டாய், நல்நெஞ்சே! உத்தமன்; என்றும் உளன்கண்டாய், உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்; விண் ஒடுங்கக் கோடுஉயரும் வீங்குஅருவி வேங்கடத்தான் மண் ஒடுங்க, தான் அளந்த மன்.' என்ற பூதத்தாழ்வார் பாசுரத்தால் அவனை மனம் மொழி மெய்களால் வாழ்த்தி வணங்கிச் சரண் அடைகின்றேன். வேங்கடம்’ ந. சுப்புரெட்டியார் அண்ணாநகர் தொ.பே. 615583 சென்னை-600 040 திசம்பர் 15, 1988 11. மூன். திருவந். 40