பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநோதச் செயல் கள் 445 பெரும்பாலோர் தடையாக நிற்பர் என்றும், இதனால் பெருங்கலகம் விளைதல் கூடும் என்றும் கருதிமுன் எச்சரிக்கை யாகப் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு காவல் துறைக்கு விண்ணப்பமும் அனுப்பப்பெற்றது. இரு சாராரிலும் முக்கிய மானவர்கள் காவல் நிலையத்தில் அடிக்கடிக் காணப் பெற்றனர். இருபக்கத்தி லும் பணத்தின் திருவிளையாடல்கள் இருந்தன, ஒரு நாள் புதிதாகத் துறையில் பணியேற்ற காவல் துறை துணை மேலாளர் (Assistant Superir:tendent of Police) ஊரில் முகாம் அமைத்துக் கொண்டு ஊரின் நிலைமையை நோட்டம் விட்டார். இருபது இருபத்தைந்து போலிஸ் ஐ வான் கள், சார் ஆய்வாளர்கள் (Sub-Inspectors) இருவர் வட்ட ஆய்வாளர் (Circle Inspector) ஒருவர் என்று காவலர் களின் கூட்டம் பெரு கியிருந்தது, ஊர் மாரியம்மன் கோயிலரு கிலுள்ள ஒரு பெரிய மரத் தடியில் பெருங் கூட்டம் கூடியது. காவல் துறை துணைக் மேலாளர் மிக்க இளைஞர்; விருப்பு வெறுப்பு இல்லாமல் நிலைமையை நோட்டம் இட்டு அறிந்து கொண்டார். இளங்கலைப் பட்டம் பெற்று வேலை தேடும் படலத்தில் இருந்த என்னைப் பார்த்துக் காவல் துறைத் துணை மேலாளரிடம் பேசுமாறு என் மைத்துனர் பக்கத்துப் பெருமக்கள் தூண்டினர், அவர்கள் விருப்பத்திற்கிணங்க நானும் அவரைப் பார்த்து உரையாடிக் கொண்டிருந்தேன், நானும் இளைஞன்; அவரும் இளைஞர், 'இறைவழி பாட்டில் தகராறு வரக்கூடாது, ஊர்த்தேவதை அனை வருக்கும் பொது. வெளியூர்க்காரரும் வந்து வழிபாடு செய்வதிலும் தடை இருக்கக் கூடாது என்றெல்லாம் பொது வாகப் பேசினேன். துறையில் பழகிச் சாயம் ஏறாததால் நேர்மையில் தவறாதவராக இருந்தார். காவல் அதிகார் நான் கூறியகருத்துகள் அவர் ஏற்பதாகக் காணப்பட்டன இருசாராருக்கும் அறிவுரை வழங்கி னார்; இறைவழிப் பாட்டில் எந்தவிதப் பிணக்கும் வே ண்டா என்பதை