பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு V, சொக்கலிங்கம் பிள்ளை 213 வசிய மருந்து உண்ணச் செய்தாராம். மந்திரவாதியை கொண்டு பில்லி சூனியம் வைத்தாராம். இதனால் தன் உடல் நலம் மிகவும் சீரழிந்து பணி செய்யும் திறன் இல்லாதும் போயிற்றாம். உடனே தன் வீட்டார் வேறொரு மந்திரவாதியைக் கொண்டு இந்தச் சதியை அறிந்தார்களாம். அவரைக்கொண்டு மாவினால் ஒரு பதுமை செய்வித்து ஜபம் செய்து அதில் பல ஊசிகளைக் குத்தினார்களாம். ஒவ்வொரு ஊசி குத்தப்படும்போதும் இவர் வயிற்றிலிருந்த மருந்து சிறிது சிறிதாக வெளிப் பட்டதாம். இன்னும் என்ன என்னவோ செய்ததாகச் சொன்னார். அவற்றை இப்போது நினைவுக்கூர முடிய வில்லை. இரண்டு ஆண்டுகளில் உடல் நிலை சீர் அடைந்த தாம். இப்படியும் ஒர் அரக்கத்தன்மையுள்ள மாமனார். இருப்பாரா என்ற வியப்பும் திகைப்பும் எழுகின்றன. நான் காரைக்குடிக்கு வந்ததும் அவரைக் காணும் போது அவரிடம் சிறிது மாற்றம் காணப்பட்டது. 1940-41 இல் சைதையில் அவரிடம் கண்ட உற்சாகம், சிரித்த முகத்துடன் பேசுவது போன்றவற்றில் சிறிது மாற்றம் காணப்பட்டது. சற்று வயது முதிர்ந்தமையால் இம்மாற்றம் இருக்குமோ என்று நினைத்து வாளா இருந்து விட்டேன். குடும்ப வாழ்க்கை சரியாக அமையாததற்குக் காரணம் வினவினேன். மனைவியுடன் மனம் ஒத்து வாழ முடியவில்லை என்று மட்டிலும்தான் சொன்னார். அதற்கு மேல் நானும் குடைந்து கேட்கவில்லை. இப்போது தான். உண்மைக் காரணம் புரிந்தது. காரைக்குடியில் இலக்குமிபுர அகிரகாரத்தின் அருகில் தன் சொந்த வீட்டில் தன் தம்பியுடன் வாழ்ந்தார். இவர் தம்பி சினிமா கொட்டகையில் ஏதோ ஒரு சிறு வேலை: அங்குப் பெறும் ஊதியம் வாழ்க்கை நடத்துவதற்குப் போதாது. இவர் உதவியால்தான் தம்பியின் வாழ்க்கை நன்கு அமைந்திருந்தது. இவர் வீட்டுக்கருகில் அக்கிர