பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நினைவுக் குமிழிகள்-4 என்று அவனைச் சிக்கனெப் பிடித்துக் கொண்டேன். இனி எனக்கு எந்தவிதக் குறையும் இராது. அப்படி ஏதாவது இருந்தாலும் அஃது என் ஆசையால் முளைப்பவை. கோவிந்தராஜனைச் சேவிக்கும்பொழுது பாரதியா சின் பாடல்களைபாடிச் சேவிப்பேன். கண்ணிரண்டும் இமையாமல் செந்நிறத்து மெல்லிதழ்ப்பூங் கமலத் தெய்வப் பெண்ணிரண்டு விழிகளையும் நோக்கிடுவாய் கோவிந்தா! பேணி னோர்க்கு நண்ணிரண்டு பொற்பாதம் அளித்தருள்வாய் சராசரத்து நாதா! நாளும் எண்ணிரண்டு கோடியினும் மிகப்பலவாம் வீண்கவலை எளிய னேற்கே. எளியனேன் யானெனலை எப்போது போக்கிடுவாய், இறைவ னே! இவ் வளியிலே பறவையிலே மரத்தினிலே முகிலினிலே வரம்பில் வான வெளியிலே, கடலிடையே மண்ணகத்தே வீதியிலே வீட்டி லெல்லாம் களியிலே, கோவிந்தா! நினைக்கண்டு நின்னொடுநான் கலப்ப தென்றோ? என்கண்ணை மறந்து உன் இரு கண்களையே என்னகத்தில் இசைத்துக் கொண்டு நின்கண்ணால் புவியெல்லாம் நீயெனவே நான் கண்டு நிறைவு கொண்டு வன்கண்மை மறதியுடன் சோம்பர்முதல் பாவமெலாம் மடிந்து, நெஞ்சிற் புன்கண்போய் வாழ்ந்திடவே, கோவிந்தா! எனக்கமுதம் புகட்டு வாயே." 4. பா. க. தோ. பா: கோவிந்தன் பாட்டு (1,2,3)