பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. மாவட்டக் கல்வி அலுவலர் பயிற்சி

இயக்குநர் சொன்ன இரகசியம்

பொதுக்கல்வி இயக்குநர் சர்மெவரல் ஸ்டேதம் மாவட்டக் கல்வி அலுவலராகத் தேர்ச்சிபெற்ற என்னிடம் நம்பிக்கைவைத்து, இரகசியச் செய்தியைத் சொல்லியனுப்பியது, எனக்கு அச்சம் ஊட்டியது.

‘எல்லோரும் அய்யாசாமியாக இருக்க மாட்டார்கள். ஊரின் வாயை மூடுவதற்கு உலை மூடி ஏது?

‘என்னிடம் சொல்லும் இச் செய்தியை இயக்குநர் சிலருக்காவது சொல்லி இருக்கலாம். அவர்களில் ஒருவர், இரகசியத்தை வெளியிட்டு விடக்கூடும். கடைசியில் பழி இளைஞனாகிய என் மேல் விழலாம். ‘

இப்படிப்பட்ட சிந்தனைகள் விரைந்து மின்னியதால் அச்சங் கொண்டேன். எனினும் இயக்குநர் சொன்னதைக் கேட்கத்தானே வேண்டும் கேட்டேன்.

அவர் என்ன சொன்னார்?

‘'சாதாரணமாக ஆறு திங்கள் வரை முன் பயிற்சி கொடுப்பதுண்டு. உனக்கு நான்கு திங்கள் பயிற்சியே போதும் என்று ஆணையிட்டுள்ளேன்.

‘எனினும், நான்கு திங்கள் முடிவதற்கு முன்பே, கோவை மாவட்டக் கல்வி அலுவலராகவே, பொறுப்பேற்கவும் நேரிட்டு விடலாம்.

‘உனக்குப் பயிற்சி கொடுக்கப் போகும் திரு. குலாம் தஸ்தர்ே விரைவில் பதவி உயர்வு பெறுவார். மண்டலக் கல்வி ஆய்வாளர் பதவி (1)ivisional Inspector of Schools) oilaosrojai of a 105.5@55, oaw) 65th.

‘இச் செய்தியை அவரிடம் தனியாகச் சொல்லிவை. இதைப் பற்றி மற்றவரிடம் பேச்சு மூச்சு விடவேண்டாம் என்றும் சொல். நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/31&oldid=623228" இலிருந்து மீள்விக்கப்பட்டது