பக்கம்:நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 சி என். அண்ணுாத்துரை மூன்றாவது அடுக்கு மாடியில் உலவும் தொழி லாளிக்கு அந்த மாடி வீடும். மர உச்சியில் கனி பறிப்ப வனுக்கு அந்த மரமும் சொந்தமில்லாததால் அவர்கள் நிலை உயர்ந்திருந்தும் நினைப்பு தாழ்ந்திருந்தது. அவர் களே அவர்கள் கட்டுகிற வீட்டுக்கும், ஏறுகிற மரத் திற்கும் சொந்தக்காரர்கள் என்ற நிலை ஏற்பட்டிருந் தால் அவர்கள் நினைப்பும் உயர்ந்திருக்கும். இது நியதி. இப்பொழுது இந்தியா இந்தியருக்குச் சொந்தமாகி இந்தியாவை வறுமையாக்குவதோ, வளமாக்குவதோ இந்தியர் கையிலேயே இருக்கிறது. சொந்தமான நாட்டில் சுதந்தரமாக வாழும் நிலை ஏற்பட்டுவிட்டால், நினைப்பு இயற்கையாகவே உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், நாட்டின் நிலை உயர்ந்த அளவுக்கு நினைப்பு உயர்ந்ததாகத் தெரியவில்லை. பொதுவாக இந்தியா - குறிப்பாகத் தமிழ்நாடு தாழ்ந்த நினைப்பில் இருக்கிறது. எங்கும் சமாதானத் தைப் பற்றிச் சந்தேகம்! சுதந்திரம் கிடைத்தும் சுகம் கிடைக்குமா என்ற ஏக்கம் !! ஏன் இந்த இழிவான நினைப்புகள்? சந்தோஷத்திற்குப் பதில் சந்தேகம். வருங்காலத்தைப்பற்றி நெஞ்சில் ஆசை படருவதற் குப் பதில் அச்சம். ஏன்? தமிழ் நாட்டில் நிலை உயர்ந் திருக்கிறதா? முதலில் என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்; பிறகு உங்களைக் கேட்கிறேன். முன் னாளில் தமிழகத்தின் நிலை எவ்வாறிருந்தது? முன் னாளில் தமிழகத்தில் போர் என்றவுடன் வீரர்களின் புயம் வீங்கும்; அவர்கள் உள்ளம் கிளர்ந்தெழும், அரசர்கள் அன்பால் ஆட்சி செலுத்தினார்கள்; அவர்