பக்கம்:நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 சிலர் கூறலாம். .. சி.என். அண்ணுத்துரை விஞ்ஞானத்தைப் பற்றி, கவலைப்படவில்லையா? விஞ்ஞானத்தை யாரும் இந்த நாட்டில் போற்றவில்லையா? இது அடாது!ரேடியோ வும், மின்சாரமும், டெலிபோனும், சினிமாவும் விஞ் ஞான் சாதனங்களல்லவோ? அவைகள் இங்கு இல்லையா. ஏராளமாக உள்ளனவே." என்று கூறலாம். விஞ்ஞான சாதனங்களை நாம் பார்ப்பதற்கும் அனு பவிப்பதற்கும், மேல் நாட்டார் பார்ப்பதற்கும், அனு பவிப்பதற்கும் எவ்வளவோ வேறுபாடுகள் உண்டு. மேலாகப் பார்த்தால் சில விஞ்ஞான சாதனங்களைக் கொண்ட நம் நாடும் விஞ்ஞானத்தில் முன்னேறியிருப் பதாகத் தோன்றும். கூர்ந்து கவனித்தால்தான் நம் நாட்டில் எவ்வளவு தூரம் விஞ்ஞானம் போற்றப்படு கிறது என்பது தெரியும். ரேடியோ ஒரு விஞ்ஞான சாதனம். அறிவு முன்னேற்றத்தைக் குறிக்கும் கருவி. அதன் மூலம் இலண்டனில், கல்கத்தாவில், ரெங்கோ னில், ருஷ்யாவில், டோக்கியோவில் என்னென்ன நடக் கின்றன என்று தெரிந்துகொள்ளலாம். ஆனால் ஜனங் கள் திருத்தணி, திருப்பதி, திருவாரூர் சிதம்பரம் போன் ற திவ்ய க்ஷேத்திரங்களையும் ஆங்காங்கு நடக் ற விழாக்களையும் பற்றித் தெரிந்துகொள்ளக் காட்டு கிற அளவுக்கு ஆசையை, ரேடியோவின் மூலம் லண் டன், கல்கத்தா, ரெங்கோன்ஆகியவைப் பற்றித் தெரிந்துகொள்வதில் காட்டமாட்டார்கள். ரேடியோ இருந்து என்ன பயன்? எந்த முற்போக்குக்காக, லட் சியத்திற்காக ரேடியோ கண்டுபிடிக்கப்பட்டதோ, அந்த முற்போக்கு லட்சியம் நம்மவரால் கடைப்பிடிக் கப்படவில்லை. ரேடியோ இருக்கட்டும். திடீரென்று