பக்கம்:நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 கள். சி. என். அண்ணுத்துரை கிராமத்தார்கள். மாணவர்கள் கிராமத்து மக்களிடம் பகுத்தறிவு இருக்கும் என்று எதிர்பார்த் தார்கள்.கிராமத்து மக்கள் மாணவர்களிடம், சாவடிப் பிசாசைப்பற்றியும், கிராமத்துப் பயிர்களைப்பற்றியும் அனுபவம் இருக்குமென்று எதிர்பார்த்தார்கள். இருவர்கள், எதிர்பார்த்தும் இருவர்களிடமுமில்லை. எப்படி இருக்கும். எப்படி இருக்க முடியும்' மக்கள் மாணவர்களிடம் இல்லாததை எதிர் பார்க்கிறார்கள், மாணவர்கள் மக்களிடம் இல்லாததை எதிர் பார்க் கிறார்கள். இல்லாததை இருவர்களும் இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இருவர்கள் இருப் பதும் வெவ்வேறு இடம். இருவர்கள் எண்ணங்கள் இருப்பதும் வெவ்வேறு இடம். இருவர்களுக்கு மிடையே பெரிய பிளவு. பாலம் கட்டப்படவேண்டும், பாலம், கல்வி அமைச்சர்தான் மாணவர்களைக் கொண்டு கட்டவேண்டும். கிராம மக்களுடைய மனதில் நல்லது இது கெட்டது இது, உண்மை எது, கற்பனை எது என்று பொருள்களைப் பிரிக்க முடியாதபடி மாசு படிந்திருக் கிறது. மனதிலே மாசுள்ள அந்த மக்களிடம் படித்துப் பட்டமும் பகுத்தறிவும் பெற்ற மாணவர் கள் நன்மையிது தீமையிது, கற்பனை எது, உண்மை எது என்று பொருள்களை பிரித்துக்காட்டி அறிவுப் பிரசாரம் செய்தாலோ அவர்கள் சொல்லுவதை நம்புவதில்லை கிராம மக்களிடம் இது இது கற்பனை என்று எடுத்துக்கூறிவிட்டால் உடனே. அவர்கள் கற்பனையைக் கைவிட்டுவிடுவார்கள், உண்மையைப் 7605a