பக்கம்:நிலையும் நினைப்பும், மூன்றாம்பதிப்பு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலையும் நினைப்பும் - 40 பின் பற்றுவார்கள். இவர்கள் ஏதோ பிரமாதப் படுத்துகிறார்கள் என்று நமது பகுத்தறிவுப் பிரசாரத்தைப்பற்றி பரிகாசமாக பேசுகிறவர்கள் பிரச்சாரம் செய்து பார்க்கவேண்டும். அவர்கள் பக்கத்திலுள்ள ஊர், வல்லம் படுக்கைக்கு பிரச்சாரத் திற்கு செல்லுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் கிராமப் பிரசாரத்திற்குச் சென்றவர்கள் திராமத்து தலைவரை அணுகி நாங்கள் உங்கள் ஊரில் பிரச்சாரம் செய்ய விரும்புகிறோம் நீங்கள் தயதுசெய்து கூட்டத் திற்கு ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று கேட் பார்கள். உடனே கிராமத்துத் தலைவர் பிரசாரர்களைப் பார்த்து கேட்பார், "நீங்கள் படித்தவர்கள் என்று சொல்லுகிறீர்களே படித்தவர்களுக்கு வைக்கும் பரிட்சையைப் பாருங்கள் உங்களுக்கு பாரதம் தெரியுமா? பிரசாரகர்கள் தெரியாது என்றவுடன் அப்ப ராமாயணம் தெரியுமா" என்று கேட்பார். இவர்கள் நாங்கள் படித்ததில்லை என்பார்கள். கிராமத்துத் தலைவர் உடனே சொல்லுவார் 'உங் களுக்கு புராணங்களிடம் நம்பிக்கையில்லை என்று சொல்லுங்க. நீங்கள் இராவணனுக்கு 10 தலை என்பது கவியின் கற்பனையாகத்தானிருக்க வேண்டும் என்று கூறுவார்கள். கிராமத்துத் தலைவர், உடனே முடிவு கட்டிவிடுவார். இவர்கள் ஒன்று இராமாயணம் படிக்காதவர்களாயிருக்க வேண்டும் அல்லது இப்படி ஈரோட்டு பக்கம்போய் வந்திருக்க வேண்டும், என்று கிராமத்து மக்கள் எந்த விளக் கத்தைத் தந்தாலும் நம்பமாட்டார்கள். எப்படி நம்புவார்கள்? அவர்கள் நம்பவேண்டியதை நம்ப