பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொண்டு வைத்தாள். அப்பொழுது டாம் ஜியார்ஜைப் பார்த்து, 'நேரமாகிவிட்டது! நாம் பிரார்த்தனையைத் தொடங்குவோமா?' என்று கேட்டான். "அப்படியே செய்வோம்' என்று ஜியார்ஜ் கூறினான். அந்த நேரத்தில் ஷெல்பி பிரபுவின் தோட்டங்களில் வேலை செய்து வந்த எல்லா அடிமைகளும் அங்கே வந்து கூடிவிட்டனர். தேவ கீதங்கள் பாடப்பட்டன. ஜியார்ஜ் வேதப் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வாசித்தான். டாம் மாமா, அன்புத்தும்பும் உள்ளத்தோடு, ஓர் உபதேசம் செய்தான். சிறிது நொடி எல்லோரும் பிரார்த்தனை செய்துவிட்டு, டாமிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே சென்றனர்.

டாம் வாயிற் கதவை அடைத்துக் கொண்டு உள்ளே சென்று சிறிது நேரம் குழங்தைகளிடம் விளையாடிக் கொண்டிருந்தான். கைக் குழந்தையான போலி அவன் மூக்கையும் தலையையும் பிடித்து வேடிக்கை செய்து கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்குப்பின் டாம் குழந்தைகளைக் கட்டிலிலே படுக்க வைத்துத் துாங்கச் செய்தான். குளோ தன் வேலைகளை முடித்து விட்டு, தானும் அயர்ந்து கண் மூடினுள். டாமும் குழங்தைகளின் பக்கத்தில் படுத்துக் கொண்டான்.

அவர்கள் படுத்துக்கொண்டு வெகு நேரமாகவில்லை. திடீரென்று யாரோ குடிசையின் கதவைத் தட்டும் ஓசை கேட்டது. உடனே குளோ எழுந்திருத்தாள். வெளியேயிருந்து அத்தை, அத்தை!' என்று குரல் கேட்டது. அது லிஸாவின் குரல் என்று தெரிந்ததும், குளோ வாயிற் கதவைத் திறந்தாள். அந்த நடுஙிசியில் நல்ல உடைகள் அணிந்து எலிஸா தன் குழந்தையையும் துாக்கிக்கொண்டு வந்

II

11