பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முன்புதான் அகஸ்டின் அவனுக்கு விடுதலை அளிக்கப் போவதாகச் சொல்லியிருந்தார். அவருடைய கடைசி விருப்பத்தை மேரி நிறைவேற்றுவாளா ? அவள் தன் அருமைப் பெண் ஈவா டாமுக்கு விடுதலை அளிக்க வேண்டுமென்று அடிக்கடி சொல்லி வந்ததை இப் பொழுது கினைத்துப் பார்ப்பாளா? டாமுக்கு ஒன்றும் புரியவில்லை. பிரார்த்தனை செய்வதில்கூட அவனுக் குச் சலிப்பு ஏற்பட்டது. விரைவிலே தன் மனைவியை யும் குழந்தைகளையும் போய்ப் பார்க்கலாம் என்று அவன் ஆசை கொண்டிருந்தான். திடீரென்று அந்த ஆசையில் மண் விழுந்துவிட்டது. எனினும் டாம் நம்பிக்கையைக் கைவிடவில்லை. அவன் ஒபீலியாவைக் கண்டு பேசினன். அம்மா ! யசமான் என்னை விடுதலை செய்யப் போவதாகச் சொல்லி யிருந்தார். அதற்கு வேண்டிய பத்திரமும் எழுத ஏற்பாடு செய்திருந்தார். எனக்காகத் தாங் கள் யசமானியம்மாளைக் கண்டு பேசினல் கல்லது. விடுதலைப் பத்திரத்தைச் சீக்கிரமாக எழுதி முடித் தால், நான் ஊருக்குத் திரும்பிச் செல்லமுடியும்’ என்று தெரிவித்தான். அவனுக்காக ஒபீலியா எத்த உதவியும் செய்யத் தயாரா யிருந்தாள். கான் மேரியிடம் விவரமாகக் கேட்டு வருகிறேன். ஆளுல் அவள் ஒரு பிடிவாதக் காரி. என்னல் இயன்றதை நான் செய்கிறேன்’ என்று அவள் கூறிஞள். گی கூடத்தில் மேரி ஒரு சோபா'வில் அமர்ந்து கொண்டிருந்தாள். அவளருகில் ஒரு வேலைக்காரி புதிய துணிகள் சிலவற்றை அவளிடம் எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தாள். கணவர் இறந்ததற்காக

74

74