பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் இளமையாக வாழலாம்

49


அதிகமான தண்டனை தான். பெண்களுக்குப் பொதுவாக வழுக்கையோ சொட்டையோ விழுவதில்லை.

முடி உதிர்வதும் நரைப்பதும் எந்த வயதிலிருந்து ஆரம்பிக்கும்?

கறுத்தமுடி நரைப்பது இருபதிலும் உண்டு எழுபதிலும் உண்டு. சிலருக்குத் தொண்ணூறு வயதிலும் நரைப்பதில்லை. இந்த நிலை ஏன்? முடி வளர்வதற்கும் முடி உதிர்வதற்கும் உடலில் உள்ள ஒரு வகையான அமிலச் சுரப்பிகள் தான் காரணம். இத்தகைய சுரப்பிகள் சுரப்பதில் தளர்ந்து தவறுகிறபொழுதுதான். இத்தகைய தகராறுகள் வருகின்றன. அதிலும் ஆண்களுக்குரிய சுரப்பிகள்தான் இப்படி அவல நிலைக்கு ஆளாகின்றன.

முடி உதிர்ந்து போனால், அந்த வழுக்கைத் தலையில் வேறு எந்த முயற்சிகளாலும் முடிமுளைக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திவிட முடியாது.

முடியைப் பாதுகாப்பதால், பத்திரமான பழக்க வழக்கங்களால், தூய்மையாக வைத்திருந்தால், விழாமல் வைத்துக் கொள்ளலாம். என்றாலும் அதற்கு நம்மால் உத்திரவாதம் அளிக்க முடியாது.

முடியானது வயதாகும் போது, நெளியும் தன்மையிலிருந்து மாறி நிமிர்ந்து நிற்கின்ற வளையாத்தன்மையை அடைவதை நாம் பார்க்கலாம்.

இது போலவே, நகங்களும் இருக்கின்றன. வயதின் முதிர்ச்சி காலத்தில், கை விரல், கால் விரலில் உள்ள நகங்கள் எளிதில் உடையக் கூடியனவாக, முரட்டுத்தன்மை மிகுந்தனவாக, கடினமானதாக மாறிப் போகின்றன. இதுவும் சரியாகப் பாதுகாக்காத காரணத்தால் தான் மாறிப் போகின்றன. என்றும் கூறுகின்றார்கள்.