இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
84
டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா
முதுமைக்குள்ளே முளைக்கும் நோய்கள்!
நோயும் வாயும்
வயதாகி வருகிறது என்றாலே நோய்களும் கூடவே வருகின்றன என்றே பலர் நினைக்கிறார்கள். மற்றும் பலர் நம்புகின்றனர். அஞ்சி நடுங்குகின்றனர்.
முதுமையை நாம் நோய் என்றால், இளமையும் நோய்தான். பிஞ்சுப் பருவமும் நோய்தான். பேதைப் பருவமும் நோய்தான்.
நோய்க் கூறுகள் உடலுக்குள் உறைந்து ஒளிந்து கொண்டுதான் கிடக்கின்றன. வலிமையான உடலமைப்பும், வளமையான உறுப்புக்களும், வளையம் வரும் நோயணுக்களை விரட்டியடிக்கின்றன. இல்லையென்றாலும் அவைகளை வாலாட்ட விடாமல் ஒதுக்கித் தள்ளி வைக்கின்றன.
சரியாக உடல் நலத்தைப் பேணிக் காக்காமல், சந்தர்ப்பங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் சாகசப்பட்டு, அந்த சதிர்களுக்குள்ளே புதிர்களை எழுப்பிக் கொண்டு புதைந்து